புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆந்திர முதல்வருடன் பிரதமர் பேச்சு!
'மிக்ஜம்' புயல் ஆந்திரம் அருகே கரையைக் கடக்கவிருக்கும் நிலையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆந்திர முதல்வரிடம் பிரதமர் பேசினார்.


வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள 'மிக்ஜம்' புயல் ஆந்திரம் அருகே கரையைக் கடக்கவிருக்கும் நிலையில் புயலுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியுடன் பிரதமர் மோடி பேசினார்.
மாநிலத்திற்குத் தேவையான அணைத்து உதவிகளையும் செய்யுமாறு உயர் அதிகாரிகளுக்குத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: ம.பி.: பாஜக 161, காங். 66 தொகுதிகளில் முன்னிலை!
வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள 'மிக்ஜம்' புயல் தெற்கு ஆந்திரக் கடற்கரைப் பகுதியில் நெல்லூர் மற்றும் மசூலிப்பட்டினம் இடையே கரையைக் கடக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 80 முதல் 90 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசலாம் எனவும் மக்கள் பாதுகாப்பாக இருக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...