மத்தியப் பிரதேசத்தில் பாஜக தொடர்ந்து முன்னிலை வகித்து வெற்றிவாய்ப்பை பிரகாசமாக்கியுள்ளது. பகல் 1 மணி நிலவரப்படி பாஜக 161 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது.
ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களில் வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை (டிச. 3) முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதனைத் தொடர்ந்து வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. தபால் வாக்கு எண்ணிக்கை முடிவில் பாஜக முன்னிலை பெற்றது. தொடர்ந்து வாக்குப்பெட்டி வாக்குகள் எண்ணிக்கையிலும் பாஜக பெரும்பான்மையான இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.
காலை 11 மணி நிலவரப்படி பாஜக 155 இடங்களில் முன்னிலை பெற்றிருந்த பாஜக, 1 மணி நிலவரத்தில் 161 இடங்களில் முன்னிலை பெற்றது.
பாஜகவுக்கு அடுத்தபடியாக காங்கிரஸ் கட்சி 66 இடங்களிலும், பிஎஸ்பி 2 தொகுதிகளிலும் பாரத் ஆதிவாசி கட்சி ஓரிடத்திலும் முன்னிலை வகிக்கிறது.
230 தொகுதிகளைக் கொண்ட மத்தியப் பிரதேசத்தில், வெற்றிவாய்ப்புக்காக 116 இடங்களில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். தற்போது பாதிக்கும் அதிகமான இடங்களில் பாஜக முன்னிலை பெற்றுள்ளதால், பாஜக தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெங்களூருவில் பெய்த கனமழைக்கு சுவா் இடிந்து விழுந்து 7 போ் பலி: பிரதமர் மோடி இரங்கல்; நிவாரண நிதி அறிவிப்பு

லடாக்கில் மிதமான நிலநடுக்கம்!

விஜய்தான் தமிழ்நாட்டை ஆள்வார்; இலங்கை, நேபாளம் போல கருத்துக்கணிப்புகள் பொய்யாகும்! - செங்கோட்டையன்

ரயில்வே நிதிக்கழகத்தில் உதவி மேலாளர் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் விண்ணப்பங்கள் வரவேற்பு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


