டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

வெற்றி பெற்றவுடன் 5 நட்சத்திர விடுதிக்கு வரவும்: கட்சிகளின் திட்டம்!

கட்சிகள் தங்களின் வெற்றி வேட்பாளர்களைத் தக்கவைக்க 5 நட்சத்திர விடுதிகளை முன்பதிவு செய்து வருகின்றன.

News image
கோப்புப் படம்
Updated On :6 பிப்ரவரி 2024, 1:20 pm

DIN

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் தெலங்கானா மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் வருகிற நாடாளுமன்ற தேர்தலின் முன்னோட்டமாகப் பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், தேர்தல் முடிவுகளுக்குப்பின் ஏற்படும் கட்சி தாவல்களைத் தடுக்க கட்சிகள் தங்களின் வெற்றி வேட்பாளர்களை ஒருங்கிணைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளன.

தெலங்கானா மாநிலத்தில் கட்சிகள் 5 நட்சத்திர விடுதிகளை முன்பதிவு செய்துவருகின்றன.

பிஆர்எஸ், காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய கட்சிகளிடையே மும்முனை போட்டி நிலவுகிற சூழலில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

காங்கிரஸ் கட்சி, தனது வேட்பாளர்களுக்கு வெற்றி பெற்ற பிறகு சான்றிதழைப் பெற்று கொண்டு நேரடியாக ஹைதராபாத் தாஜ் கிருஷ்ணா விடுதிக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அங்கிருந்து அவர்கள் கர்நாடகா மாநிலத்துக்கு இடம் மாற்றப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்த ஏற்பாடுகளை கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார் பொறுப்பேற்று மேற்கொண்டுவருவதாக்வும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

119 தொகுதிகளுக்கான தெலங்கானா சட்டப் பேரவைத் தேர்தலில் வெற்றி பெறத் தேவையான 61 தொகுதிகளைக் கைப்பற்றும் கட்சி ஆட்சி அமைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.