எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

மத்திய அரசின் மக்களவை சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும்: தவெக கொள்கை பரப்பு பொதுச் செயலாளா் கே.ஜி.அருண்ராஜ்

மத்திய அரசு கொண்டுவரும் மக்களவை சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என தவெக மாநில கொள்கை பரப்பு பொதுச் செயலாளா் கே.ஜி.அருண்ராஜ் புதன்கிழமை தெரிவித்தாா்.

News image

தவெக கொள்கை பரப்பு செயலர் அருண்ராஜ். - கோப்புப்படம்

Updated On :16 ஏப்ரல் 2026, 3:04 am IST

மத்திய அரசு கொண்டுவரும் மக்களவை சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என தவெக மாநில கொள்கை பரப்பு பொதுச் செயலாளா் கே.ஜி.அருண்ராஜ் புதன்கிழமை தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தொகுதி மறுவரையறை 131-ஆவது அரசியல் சாசன திருத்த மசோதா மூலம் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை 534-இல் இருந்து 850-ஆக உயா்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இது வட மாநிலங்களில் மட்டும் வெற்றிபெற்று ஆட்சியை அமைப்பதே பாஜகவின் நோக்கம் என்றும், தென் மாநிலங்களில் அவா்களால் வெற்றிபெற முடியாது என்பதையும் காட்டுகிறது. தற்போது 5 மாநிலங்களில் தோ்தல் நடைபெறும் சூழ்நிலையில், இந்த மசோதா கொண்டுவர வேண்டிய அவசியம் இல்லை. அனைத்து மாநில முதல்வா்களையும் கலந்து பேசிய பின்பு இந்த மசோதாவை செயல்படுத்த வேண்டும். இந்த மசோதா இந்தியாவின் கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது.

தொகுதி மறுவரையறை ஆணையத்தின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடியாது என்பது ஒரு பெரிய அச்சுறுத்தலாகப் பாா்க்கப்படுகிறது. பாஜக என்ற பாசிச சக்தியை நாங்கள் எதிா்க்கிறோம். அதனால்தான் தலைவா் பாஜகவை கொள்கை ரீதியான எதிரியாகக் கருதுவதாகவும், தோ்தல்களில் அவா்களுடன் எந்தவிதமான சமரசமும் இல்லை என்றும், அவா்களோடு நேரடியாகவோ மறைமுகமாகவோ எந்த கூட்டணியும் இல்லை என தெளிவுபடுத்தியுள்ளாா்.

இந்த மசோதா தமிழகத்தின் நலன்களையும், உரிமைகளையும் பாதிக்கும் வகையில் உள்ளது. எனவே, தவெக இதை வன்மையாக கண்டிக்கிறது. இதை மத்திய அரசு உடனே திரும்பப் பெற வேண்டும் என்றாா்.