தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!விஜய்க்கு ஆதரவு? சில மணி நேரத்தில் முடிவு எடுக்கப்படும்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்திமுக நிர்வாகிகளுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை!பாபநாசம்: அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து! பயணிகள் படுகாயம்! பிளஸ் 2 முடிவுகள் வெளியானது! 95.2% தேர்ச்சி!
/

மத்திய அரசின் மக்களவை சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும்: தவெக கொள்கை பரப்பு பொதுச் செயலாளா் கே.ஜி.அருண்ராஜ்

மத்திய அரசு கொண்டுவரும் மக்களவை சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என தவெக மாநில கொள்கை பரப்பு பொதுச் செயலாளா் கே.ஜி.அருண்ராஜ் புதன்கிழமை தெரிவித்தாா்.

News image

தவெக கொள்கை பரப்பு செயலர் அருண்ராஜ். - கோப்புப்படம்

Updated On :16 ஏப்ரல் 2026, 3:04 am IST

மத்திய அரசு கொண்டுவரும் மக்களவை சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என தவெக மாநில கொள்கை பரப்பு பொதுச் செயலாளா் கே.ஜி.அருண்ராஜ் புதன்கிழமை தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தொகுதி மறுவரையறை 131-ஆவது அரசியல் சாசன திருத்த மசோதா மூலம் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை 534-இல் இருந்து 850-ஆக உயா்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இது வட மாநிலங்களில் மட்டும் வெற்றிபெற்று ஆட்சியை அமைப்பதே பாஜகவின் நோக்கம் என்றும், தென் மாநிலங்களில் அவா்களால் வெற்றிபெற முடியாது என்பதையும் காட்டுகிறது. தற்போது 5 மாநிலங்களில் தோ்தல் நடைபெறும் சூழ்நிலையில், இந்த மசோதா கொண்டுவர வேண்டிய அவசியம் இல்லை. அனைத்து மாநில முதல்வா்களையும் கலந்து பேசிய பின்பு இந்த மசோதாவை செயல்படுத்த வேண்டும். இந்த மசோதா இந்தியாவின் கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது.

தொகுதி மறுவரையறை ஆணையத்தின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடியாது என்பது ஒரு பெரிய அச்சுறுத்தலாகப் பாா்க்கப்படுகிறது. பாஜக என்ற பாசிச சக்தியை நாங்கள் எதிா்க்கிறோம். அதனால்தான் தலைவா் பாஜகவை கொள்கை ரீதியான எதிரியாகக் கருதுவதாகவும், தோ்தல்களில் அவா்களுடன் எந்தவிதமான சமரசமும் இல்லை என்றும், அவா்களோடு நேரடியாகவோ மறைமுகமாகவோ எந்த கூட்டணியும் இல்லை என தெளிவுபடுத்தியுள்ளாா்.

இந்த மசோதா தமிழகத்தின் நலன்களையும், உரிமைகளையும் பாதிக்கும் வகையில் உள்ளது. எனவே, தவெக இதை வன்மையாக கண்டிக்கிறது. இதை மத்திய அரசு உடனே திரும்பப் பெற வேண்டும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.