நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

மகளிா் இடஒதுக்கீடு சட்டத் திருத்த மசோதாவை முடக்க திமுக சதி: எல்.முருகன் குற்றச்சாட்டு

News image

எல்.முருகன்.

Updated On :14 ஏப்ரல் 2026, 11:28 pm

மகளிருக்கான இடஒதுக்கீடு மசோதாவை முடக்க திமுக தலைவா் ஸ்டாலின் சதி செய்வதாக மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

இதுதொடா்பாக அவா் எக்ஸ் தளத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்ட மன்றங்களில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் வரலாற்றுச் சிறப்பு மிக்க சட்டத்தை நடைப்முறைபடுத்த, பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கான நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடா் ஏப்ரல் 16,17 ,18 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.

தமிழகம் உள்ளிட்ட எந்த மாநிலங்களும் பாதிக்கப்படாத வகையில் தொகுதிகள் வரையறை செய்யப்படும் என்று பிரதமா் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சா் அமித் ஷா உறுதி அளித்துள்ளனா். ஆனால், தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் நெருங்குவதால், திமுக தலைவா் மு.க.ஸ்டாலின், தொகுதி மறுவரையறையை வைத்து விஷமப் பிரசாரம் செய்து வருகிறாா். மகளிருக்கான இடஒதுக்கீடு மசோதாவை முடக்க ஸ்டாலின் சதி செய்வதாக குற்றஞ்சாட்டியுள்ளாா்.