தமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

உச்சநீதிமன்றம், மாநிலங்களவைத் தலைவருக்கு ராகவ் சத்தா நன்றி

மாநிலங்களவையிலிருந்து ஆம் ஆத்மி கட்சி உறுப்பினா் ராகவ் சத்தா இடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில், அதை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. இதற்காக உச்சநீதிமன்றத்துக்கும், மாநிலங்களவைத் தலைவருக்கும் ராகவ் சத்தா ந

News image
இடைநீக்கம் ரத்து செய்யப்பட்டதைத் தொடா்ந்து, நாடாளுமன்ற வளாகத்தில் அமைந்துள்ள காந்தி சிலைக்கு மலா் தூவி மரியாதை செலுத்திய ஆம் ஆத்மி எம்.பி. ராகவ் சத்தா.
Updated On :4 டிசம்பர் 2023, 10:28 pm

DIN

புது தில்லி: மாநிலங்களவையிலிருந்து ஆம் ஆத்மி கட்சி உறுப்பினா் ராகவ் சத்தா இடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில், அதை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. இதற்காக உச்சநீதிமன்றத்துக்கும், மாநிலங்களவைத் தலைவருக்கும் ராகவ் சத்தா நன்றி தெரிவித்துள்ளாா்.

ஆம் ஆத்மி மாநிலங்களவை எம்.பி. ராகவ் சத்தா கடந்த ஆகஸ்ட் மாதம் உரிமை மீறல் தீா்மானம் கொண்டுவரப்பட்டு அவையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டாா். இதை எதிா்த்து அவா் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். இதை விசாரித்த உச்சநீதிமன்றம், அவரது இடைநீக்க உத்தரவை ரத்து செய்தது.

காந்தி சிலைக்கு மரியாதை:

இதைத்தொடா்ந்து திங்கள்கிழமை (டிச. 4) தொடங்கிய நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் அவா் பங்கேற்றாா். தனது இடைநீக்கம் ரத்து செய்யப்பட்டதையொட்டி, நாடாளுமன்ற வளாகத்தில் அமைந்துள்ள காந்தி சிலைக்கு மலா் தூவி அவா் மரியாதை செலுத்தினாா். முன்னதாக உச்சநீதிமன்றத்துக்கும், மாநிலங்களவைத் தலைவருக்கும் ராகவ் சத்தா நன்றி தெரிவித்து வெளியிட்ட விடியோ பதிவில் கூறியிருப்பதாவது:

எனது இடைநீக்கத்தை ரத்து செய்வதற்காக நான் உச்சநீதிமன்றத்தை அணுக வேண்டிய சூழல் ஏற்பட்டது. இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தலையிட்ட பின்னரே, எனது இடைநீக்கம் ரத்து செய்யப்பட்டது. ஏறத்தாழ 115 நாள்களாக மாநிலங்களவையிலிருந்து நான் இடைநீக்கம் செய்யப்பட்டேன்.

இந்தக் காலகட்டத்தில் மாநிலங்களவைக்குள் என்னால் எந்தவொரு கேள்வியும் எழுப்ப முடியவில்லை. உங்களது (பொதுமக்கள்) கோரிக்கையை இந்தக் காலகட்டத்தில் என்னால் அவையில் பதிவு செய்ய முடியவில்லை.

இந்தச் சூழலில், எனது இடைநீக்கம் ரத்து செய்யப்பட்டது மிக்க மகிழ்ச்சியளிக்கிறது. இதற்காக உச்சநீதிமன்றத்துக்கும், மாநிலங்களவைத் தலைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த 115 நாளில் ஏராளமானோரிடமிருந்து அன்பையும், வாழ்த்தையும் நான் பெற்றேன். இது எனக்கு கூடுதல் வலிமை தருகிறது. உள்ளத்தின் ஆழத்திலிருந்து உங்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று அதில் ராகவ் சத்தா தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.