பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

தில்லியில் மீண்டும் ‘மோசம்’ பிரிவில் காற்றின் தரம்! 

தலைநகரில் வியாழக்கிழமை காற்றின் தரம் சற்று முன்னேற்றம் அடைந்து சில இடங்களில் மீண்டும் மோசம் பிரிவிலும் பல இடங்களில் ‘மிகவும் மோசம்’ பிரிவிலும் இருந்தது

News image
கோப்புப் படம்
Updated On :7 டிசம்பர் 2023, 6:15 am

DIN

புது தில்லி: தலைநகரில் வியாழக்கிழமை காற்றின் தரம் சற்று முன்னேற்றம் அடைந்து சில இடங்களில் மீண்டும் மோசம் பிரிவிலும் பல இடங்களில் ‘மிகவும் மோசம்’ பிரிவிலும் இருந்தது என்று மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய புள்ளி விவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தரவுகளின்படி, தில்லியின் ஒட்டுமொத்த காற்றுத் தரக் குறியீடு புதன்கிழமை 286 ஆகப் பதிவாகியிருந்த நிலையில், வியாழக்கிழமை காலை 276 ஆகப் பதிவாகியிருந்தது.

இருப்பினும், தில்லியின் சில பகுதிகளில் காற்றுத் தரக் குறியீடு வியாழக்கிழமை காலை 'மிகவும் மோசமான' பிரிவில் பதிவாகியிருந்தது. வியாழக்கிழமை காலை 8 மணிக்கு ஆனந்த் விஹாரில் 348 ஆகவும், ஐடிஓ இல் 313 ஆகவும், அசோக் விஹார் பகுதியில் 323 புள்ளிகளாகப் பதிவாகி ‘மிகவும் மோசம்’ பிரிவில் இருந்தது.

முன்னதாக, தில்லி முழுவதும் காற்றின் தரம் செவ்வாய்க்கிழமை ‘மிகவும் மோசம்’ பிரிவில் இருந்தது புதன்கிழமை காலை 'மோசம்' பிரிவில் இருந்தது. ஆனந்த் விஹாரில் 291 ஆகவும், ஐஜிஐ விமான நிலையப் பகுதியில் 279 ஆகவும், ஐடிஓ இல் 252 ஆகவும், நரேலா பகுதியில் 283 ஆகவும் இருந்தது.

இதற்கிடையில், டிசம்பர் 11-ஆம் தேதி வரை தேசிய தலைநகரில் மழைக்கு வாய்ப்பில்லை என்றும்,த்துள்ளது.சனிக்கிழமை வரையிலும் நகரம் முழுவதும் காலையில் அடா் பனிமூட்டம் இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) தெரிவித்துள்ளது. 

கடந்த சில வாரங்களாக தில்லி முழுவதும் காற்றின் தரம் 'கடுமையான' முதல் '‘மிகவும் மோசம்’ பிரிவை சந்தித்து வருகிறது.

தில்லி சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் கடந்த வாரம், தேசிய தலைநகரில் கிராப்-3 நீக்கப்பட்டதாகவும், ஆனால் கிராப்-1 மற்றும் 2 கண்டிப்பாக செயல்படுத்தப்படுவதை உறுதி செய்ய அரசாங்கம் முயற்சிப்பதாகவும் கூறினார்.

"கடந்த இரண்டு நாட்களாக பருவநிலை மாற்றத்தால், மாசுபாடு குறைந்துள்ளது. காற்று தர மேலாண்மை ஆணையம் கிராப்-3 கட்டுப்பாடுகளை நீக்கியுள்ளது. பிஎஸ்-3 பெட்ரோல் மற்றும் பிஎஸ்-4 டீசல் வாகனங்கள் மீதான தடை மற்றும் கட்டுமான இடிப்புக்கான தடை நீக்கப்பட்டது" என்று கோபால் ராய் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.