ஒடிசாவில் நடந்த வருமான வரித்துறையினர் சோதனையில் சிக்கிய ரூ. 290 கோடி பணம் குறித்து காங்கிரஸ் எம்.பியிடம் விளக்கம் கேட்டுள்ளதாக ஜார்க்கண்ட் மாநில பொறுப்பு காங்கிரஸ் தலைவர் அவினாஷ் பாண்டே தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் எம்.பி. தீரஜ் சாஹுவுக்குச் சொந்தமான இடங்களிலும் அவருக்குச் சொந்தமானதான மதுபான ஆலையிலும் நடந்த சோதனையில் இதுவரை இல்லாதளவுக்கு ரூ.290 கோடி ரொக்கம் கைப்பற்றப்பட்டுள்ளது.
அவினாஷ், “கட்சி தெளிவான நிலைப்பாட்டில் உள்ளது. இது அவரது தனிப்பட்ட விவகாரம், இதில் காங்கிரஸ் செய்வதற்கு எதுவுமில்லை. அவர் காங்கிரஸ் எம்.பி. என்பதால் அவ்வளவு பெரிய பணம் எங்கிருந்து வந்தது என்பது குறித்து விளக்கம் கேட்டுள்ளோம்”
மேலும், “100 ஆண்டுகளுக்கு மேலாக குடும்பத் தொழில் நடந்துவருகிறது. தீரஜ் அதில் ஒரு பகுதி மட்டுமே. இது குறித்து அவர் விளக்கம் தரவேண்டும். இந்த விவகாரத்தில் காங்கிரஸை இழுப்பது எதிர்க்கட்சிகளின் சதி. பெரும்பான்மை அரசு ஜார்க்கண்டில் அமைந்ததுமுதல் பாஜக, பெயரைச் சீர்குலைக்கும் சதிவேலைகளில் ஈடுபட்டு வருகிறது” எனக் குற்றம் சாட்டியுள்ளார்.
பாஜக தலைவரும் ராஞ்சி எம்எல்ஏவுமான சிபி சிங், “காங்கிரஸ் கட்சி அதன் தலைவர்களைக் காப்பாற்றிக் கொள்ள சாஹுவைக் கைவிடப் பார்க்கிறது, அவர் சுயேட்சை எம்பியா அல்லது காங்கிரஸ் எம்பியா? சுயேட்சை எனச் சொல்ல சொல்லுங்கள். கட்சிக்குத் தொடர்பில்லை என ஒத்துக் கொள்கிறோம்” எனப் பேசியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெங்களூரில் கனமழை! தண்ணீரில் மூழ்கிய வாகனங்கள்!

நீலகிரி உள்பட 10 மாவட்டங்களில் இன்று கனமழை!
ஓய்வறையில் இ-சிகரெட் பிடித்த விவகாரம்! ரியான் பராக்கிற்கு அபராதம்!

"இந்தியா வியக்கும் Miracle" செங்கோட்டையன் நம்பிக்கை! | TVK
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


