10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தேதி குறித்த அறிவிப்பை சிபிஎஸ்இ வெளியிட்டுள்ளது.
அதன்படி, நடப்பு கல்வியாண்டுக்கான சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு பிப்ரவரி 15 ஆம் தேதி தொடங்கி மார்ச் 13 ஆம் தேதி நிறைவடைகிறது.
அதேபோல, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு பிப்ரவரி 15 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 2 ஆம் தேதி நிறைவடைகிறது.
ஜேஇஇ உள்ளிட்ட தேர்வுகளை கருத்தில் கொண்டு சிபிஎஸ்இ தேர்வு அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
cbse.nic.in, cbse.gov.in. ஆகிய சிபிஎஸ்இ-யின் அதிகாரபூர்வ இணையதளங்களிலும் பொதுத்தேர்வு அட்டவணையைக் காணலாம்.