வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

நீங்கள் மீண்டு வருவீர்கள்...: சுப்ரியா சுலே

தேசியவாத காங்கிரஸ் எம்.பி. சுப்ரியா சுலே தனது தந்தையும் கட்சி நிறுவனருமான சரத் பவாருக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

News image
சுப்ரியா சுலே | கோப்பு
Updated On :12 டிசம்பர் 2023, 10:39 am

DIN

தேசியவாத காங்கிரஸ் எம்.பி. சுப்ரியா சுலே கட்சித் தலைவரும் தந்தையுமான சரத் பவாரின் 83-வது பிறந்தநாளுக்குத் தனது வாழ்த்தைத் தெரிவித்துள்ளார். 

இந்தச் சூழலில் இருந்து அவர் மீண்டு வருவார் என்றும் போராட்டக் காலத்தை வெற்றி கொள்வார் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார் சுப்ரியா.

சரத் பவார் நிறுவிய தேசியவாத காங்கிரஸ்,  இந்த ஆண்டு இரண்டாக பிளவுபட்டது. சரத் பவாரின் அண்ணன் மகன் அஜித் பவார் பெரும்பான்மையான எம்எல்ஏக்கள் உடன் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான பாஜகவில் துணை முதல்வராக இணைந்தார்.

சுப்ரியா தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில், திங்கள்கிழமை சரத் பவார் நாசிக்கில் வெங்காய விவசாயிகளின் உரிமைக்காகக் குரல் கொடுத்தார். அதேயே தான் பரமதி தொகுதி எம்.பியாக மக்களவையில் பேசினேன்.

2024 மே, 31 வரை வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்ததை எதிர்த்து நாசிக் விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

சுலே தனது தந்தையைக் குறிப்பிட்டு, “இந்தப் போராட்டக் காலத்தை எல்லாம் நீங்கள் தாண்டி வந்துவிடுவீர்கள் என நாங்கள் நம்புகிறோம். நாம் போராடி வெற்றி பெறுவோம்” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், சிவ சேனை கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே, சரத் பவாரைச் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.