மத்திய அரசால் வெளியிடப்பட்ட அந்நிய நேரடி முதலீட்டு தரவுகளின்படி. மகாராஷ்டிர மாநிலம் அதிக முதலீட்டைப் பெற்று மீண்டும் முதலிடத்தைப் பெற்றுள்ளது.
சட்ட பேரவைக் கூட்டத்தில் இதனைத் தெரிவித்த மகாராஷ்டிர தொழில் துறை அமைச்சர் உதய் சமந்த், கடந்த மூன்று மாதங்களில் ரூ.28,868 கோடி அந்நிய முதலீடு வந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் தரவுகளில், மகாராஷ்டிர மாநிலம் அதிக அந்நிய முதலீட்டைப் பெற்ற மாநிலமாக இடம்பெற்றிருப்பதையும் அவர் பகிர்ந்துள்ளார்.
இதையும் படிக்க: மக்களவையில் அமளி: ஜோதிமணி உள்பட 5 எம்.பி.க்கள் இடைநீக்கம்!
இதற்கு முன்னர் கடந்த இரு நிதியாண்டுகளில் கர்நாடக மாநிலம் முன்னணி இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.