புது தில்லி: தில்லி மாநகராட்சி மேயர் ஷெல்லி ஓபராய் தனது முகநூல் (ஃபேஸ்புக்) பக்கம் முடக்கம் (ஹேக்) செய்யப்பட்டதாக வெள்ளிக்கிழமை கூறியதுடன், கடந்த சில நாட்களாக தனது சமூக ஊடகப் பக்கத்தை தன்னால் அணுக முடியவில்லை என்றும் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:
தனது முகநூல் (ஃபேஸ்புக்) பக்கம் முடக்கம் (ஹேக்) செய்யப்பட்டிருப்பதாகவும், கடந்த சில நாட்களாக தனது சமூக ஊடகப் பக்கத்தை தன்னால் அணுக முடியவில்லை என்றும் கூறியுள்ளார்.
அதை விரைவில் மீட்பதற்கான முயற்சிகளை கொள்ளப்பட்டு வருவதாக ஷெல்லி ஓபராய் மேலும் தெரிவித்தார்.
இதையும் படிக்க | டெல்டா, தென் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!
எனது பக்கத்தின் மூலம் ஏதேனும் வழக்கத்திற்கு மாறான செயல்பாடு இருந்தால், அதைப் பற்றி தயவு செய்து, எச்சரிக்கையாக இருங்கள்" என்று ஓபராய் பதிவிட்டுள்ளார்.
வாரத்தின் தொடக்கத்தில், எம்சிடியின் இந்து ராவ் மருத்துவமனையில் திடீர் ஆய்வு செய்த மேயர் ஷெல்லி ஓபராய், நிதி மற்றும் நிர்வாக முறைகேடுகள் மற்றும் சுகாதாரமின்மை காரணமாக மருத்துவ கண்காணிப்பாளரை பணியிடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.
உள்கட்டமைப்பு குறைபாடுகள் கூடிய விரைவில் தீர்க்கப்படுவதை உறுதிசெய்யுமாறு எம்சிடியின் சுகாதாரத் துறையின் மூத்த அதிகாரிகளுக்கு மேயர் அறிவுறுத்தினார்.