கிளாஸ்கோ காமன்வெல்த் நீளம் தாண்டுதலில் இந்திய வீரர் முரளி ஸ்ரீசங்கர் (27 வயது) வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இத்துடன் இந்தியாவுக்கு 13 பதக்கங்கள் கிடைத்துள்ளன.
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில், 23-ஆவது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் கடந்த ஜூலை 23ல் தொடங்கின. இதில் இந்தியாவிலிருந்து 78 வீரர்கள், 48 வீராங்கனைகள், 65 அலுவலர்கள் உள்பட மொத்தம் 191 பேர் கொண்ட குழு பங்கேற்றுள்ளது.
நீளம் தாண்டுதலில் இறுதிப் போட்டியில் நேற்றிரவு பங்கேற்ற முரளி ஸ்ரீசங்கர் 8.09 மீட்டருக்கு தாண்டி வெள்ளிப் பதக்கம் வென்றார். கடந்த 2024ல் முழங்கால் அறுவைச் சிகிச்சையில் இருந்து வெளியே வந்த முரளி ஸ்ரீசங்கர் அபாரமான கம்பேக் அளித்துள்ளார்.
முன்னாள் உலக சாம்பியன் ஜமைக்காவின் தாஜே கெயில் 8.15 மீட்டருக்கு தாண்டி தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார்.
முன்னதாக, பிர்மிங்கமில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியிலும் நீளம் தாண்டுதல் பிரிவில் முரளி ஸ்ரீசங்கர் 8.08 மீ. நீளம் தாண்டி வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார். தற்போது அதனைவிட 0.01 மீட்டர் அதிகமாக தாண்டியுள்ளார்.
இந்தியர்களிலே முதல்முறையாக ஒருவர் காமன்வெல்த் நீளம் தாண்டுதலில் இரண்டு முறை வெள்ளிப் பதக்கம் வென்றதில்லை. இந்த வரலாற்றுச் சாதனையை முரளி ஸ்ரீசங்கர் நிகழ்த்தியுள்ளார்.
முன்னதாக இந்தியாவின் சார்பாக சுரேஷ் பாபு (ஆடவர் வெண்கலம், 1978) அஞ்சு பாபி ஜியார்ஜ் (மகளிர் வெண்கலம், 2002), பிரஜுஸா (மகளிர் வெள்ளி, 2010) பதக்கம் வென்றிருந்தார்கள்.
Result Updateð¨: Athletics, Menâs Long Jump
— SAI Media (@Media_SAI) July 29, 2026
Silver for Sreeshankar! ð®ð³
TOPS Core athlete Sreeshankar shines with a Silver with a best leap of 8.09m.
Congratulations on the well-earned podium finish, Sreeshankar! ð
Here's to many more big jumps ahead.#CWG2026 #Cheer4Bharat⦠pic.twitter.com/qQQ7KWnYOR
Summary
Commonwealth Games 2026: Murali Sreeshankar wins silver, becomes India’s first double medallist in long jump
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

காமன்வெல்த்: குத்துச்சண்டையில் இந்தியாவுக்கு ஐந்தாவது பதக்கத்தை உறுதிசெய்த சாக்ஷி!

காமன்வெல்த் போட்டி: பளுதூக்குதலில் வெள்ளிப் பதக்கம் வென்ற ஞானேஸ்வரி யாதவ்!

காமன்வெல்த் போட்டி: நீச்சல், நீளம் தாண்டுதலில் இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய இந்தியா!






