புதிய அரசு பதவியேற்று ஓராண்டுக்குப் பிறகு ஹிமாச்சல் பிரதேசத்தின் சட்டப்பேரவை துணைத் தலைவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஹிமாச்சல் பிரதேசத்தில் சுக்விந்தர் சிங் சுகு தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. 68 தொகுதிகளைக் கொண்ட ஹிமாச்சல் பிரதேச சட்டப்பேரவைக்கு கடந்த 2022-ஆம் ஆண்டு நவம்பரில் தேர்தல் நடைபெற்றது.
இதில் 40 தொகுதிகளில் வெற்றிபெற்ற காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்றியது. குல்தீப் சிங் பதானியா சட்டப்பேரவைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து கடந்த ஒரு வருடமாக சட்டப்பேரவைத் துணைத் தலைவர் பதவி மட்டும் காலியாக இருந்து வந்தது.
இந்நிலையில் இன்று (டிச. 19) ஹிமாச்சல் பிரதேச சட்டப்பேரவைத் துணைத் தலைவராக மூன்று முறை சட்டப்பேரவை உறுப்பினரான வினய் குமார் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதையும் படிக்க | இனி அரசு பள்ளி ஆசிரியைகள் சுடிதார் அணியலாம்: அமைச்சர் அன்பில் மகேஸ்
சட்டப்பேரவைத் துணைத் தலைவராக செவ்வாய்க்கிழமை தேர்வு செய்யப்பட்ட பிறகு வினய் குமாருக்கு முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு, சட்டப்பேரவைத் தலைவர் குல்தீப் சிங் பதானியா மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஜெய்ராம் தாக்குர் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரயில்வே நிதிக்கழகத்தில் உதவி மேலாளர் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் விண்ணப்பங்கள் வரவேற்பு!

பொதுத் துறை வங்கியில் பாதுகாப்பு மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

பவர்கிரிட் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


