முன்னாள் பிரதமரும், மதச்சார்பற்ற ஜனதா தளத் தலைவருமான எச்.டி.தேவகௌடா பிரதமர் மோடியை சந்தித்தார்.
தேவகௌடாவின் இரண்டு மகன்கள், கர்நாடக முன்னாள் முதல்வர் எச்.டி.குமாரசாமி மற்றும் எம்எல்ஏ எச்.டி.ரேவண்ணா, ஹாசன் எம்பியான பேரன் பிரஜ்வல் ரேவண்ணா ஆகியோர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்தனர்.
முன்னாள் பிரதமர் தேவகௌடாவை சந்தித்ததில் மகிழ்ச்சி என்று பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தேசத்தின் முன்னேற்றத்திற்கு தேவகௌடாவின் முன்மாதிரியான பங்களிப்பை இந்தியா பெரிதும் மதிக்கிறது. பல்வேறு கொள்கை விஷயங்களில் அவரது எண்ணங்கள் எதிர்காலத்தைச் சார்ந்தவை என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, கர்நாடகத்தில் பாஜகவும் மதச்சார்பற்ற ஜனதா தளமும் கூட்டணி அமைத்துக்கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.