ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பாதுகாப்பு அத்துமீறல்: சதித்திட்டம் தீட்டியதாகக் குற்றம் சாட்டப்பட்டவரின் காவல் நீடிப்பு

பாதுகாப்பு அத்துமீறல் விவகாரத்தில் கைதானவர்களை விசாரிக்க நீதிமன்றம் காவலை நீடித்து உத்தரவிட்டுள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :22 டிசம்பர் 2023, 9:05 am

DIN

புது தில்லி: நாடாளுமன்ற பாதுகாப்பு அத்துமீறல் தொடர்பான வழக்கில் சதித்திட்டம் தீட்டியதாகக் குற்றம் சாட்டப்பட்டவரின் நீதிமன்ற காவலை ஜன. 5 வரை நீடித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிறப்பு நீதிபதி ஹர்தீப் கவுர், இந்தத் திட்டத்தின் மூளையாகச் செயல்பட்ட லலித் ஜாவை விசாரிக்கத் தில்லி காவல்துறை அவகாசம் கேட்டு அளித்த கோரிக்கையை ஏற்று காவலை நீடித்துள்ளார்.

லலித் ஜா, இந்த விவகாரத்தில் மூளையாகச் செயல்பட்டதாகவும் ஒட்டுமொத்த சதி குறித்தும் விசாரிக்க வேண்டும் எனவும் காவலர்கள் கூறினர்.

முன்னதாக, வியாழக்கிழமை நீதிமன்றம், இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற நால்வரின் காவலை ஜன.5 வரை நீடித்து உத்தரவிட்டது.

2001 பாதுகாப்பு அத்துமீறல் நிகழ்ந்த அதே நாளில்  சாகர் சர்மா மற்றும் மனோரஞ்சன் ஆகிய இருவர் பார்வையாளர் பகுதியில் இருந்து அவைக்குள் அத்துமீறி நுழைந்து வண்ணக்குப்பிகளை வீசினர்.

அதே நேரத்தில் அமோல் ஷிண்டே மற்றும் நீலம் இருவரும் நாடாளுமன்றத்துக்கு வெளியே புகையை உமிழும் குப்பிகளை வீசி போராட்டத்தில் ஈடுபட்டது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.