இந்திய மல்யுத்த சம்மேளத்தின் புதிய தலைவராக பிரிஜ் பூஷண் சிங்கின் நெருங்கிய ஆதரவாளரான சஞ்சய் சிங் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் நேற்று (டிச.21) மல்யுத்தத்திலிருந்து விலகுவதாக அறிவித்து அதிர்ச்சி அளித்தார்.
தொடர்ந்து, இன்று மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா தனது பத்மஸ்ரீ விருதை திருப்பியளிப்பதாக முடிவெடுத்துள்ளார்.
ஒலிம்பிக்கில் கலந்துகொண்டு வெண்கலப் பதக்கம் பெற்ற வீராங்கனை கண்ணீருடன் ஓய்வு பெறுவதாக அறிவித்தது அனைத்து தரப்பினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால், பலரும் பாஜக அரசையும் மல்யுத்த சம்மேளத்தையும் விமர்சித்து வருகின்றனர்.
இதையும் படிக்க: பத்மஸ்ரீ விருதை திருப்பியளிக்கும் பஜ்ரங் புனியா!
இந்நிலையில், சாக்ஷி மாலிக்கும் பஜ்ரங் புனியாவும் இணைந்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியைச் சந்தித்துள்ளனர்.