ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தெலங்கானா மாநிலம், ஹைதரபாத்தில் உள்ள அன்கூரா என்ற தனியார் மருத்துவமனையில் இன்று திடீர் தீ விபத்து ஏற்பட்டது. கட்டடத்தின் மேல் தளத்தில் பற்றிய தீ மளமளவென பரவியது.
தீ விபத்தைத் தொடர்ந்து மருத்துவமனையில் இருந்து நோயாளிகள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.
இதையும் படிக்க- தென்மாவட்ட மக்களை மீட்பதில் கவனம்: முதல்வர் ஸ்டாலின்
5க்கும் மேற்பட்ட வாகனங்களில் விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். உயிர்ச்சேதம் ஏற்பட்டதா என்பது குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை.