தேஜஸ்வி யாதவிற்கு மீண்டும் அமலாக்கத்துறை சம்மன்!

பிகார் துணை முதல்வரும் ஆர்ஜேடி தலைவருமான தேஜஸ்வி யாதவ் ஜனவரியில் 5-ல் ஆஜராகுமாறு அமலாக்கத்துறை புதிய சம்மன் அனுப்பியுள்ளது. 
தேஜஸ்வி யாதவிற்கு மீண்டும் அமலாக்கத்துறை சம்மன்
தேஜஸ்வி யாதவிற்கு மீண்டும் அமலாக்கத்துறை சம்மன்

ரயில்வே பணிக்கு லஞ்சமாக நிலம் பெறப்பட்டதாகப் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கில் பிகார் துணை முதல்வரும் ஆர்ஜேடி தலைவருமான தேஜஸ்வி யாதவ் ஜனவரியில் 5-ல் ஆஜராகுமாறு அமலாக்கத்துறை புதிய சம்மன் அனுப்பியுள்ளது. 

முன்னதாக தில்லியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் டிச.22-ஆம் தேதி தேஜஸ்வி யாதவையும், டிச.27-ஆம் தேதி லாலு பிரசாத்தையும் விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியிருந்தது. 

ஆனால், தேஜஸ்வி யாதவ் டிச.22-ம் தேதி ஆஜராகாத நிலையில், ஜனவரி 5-ம் தேதி மீண்டும் ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. 

கடந்த 2004 முதல் 2009-ஆம் ஆண்டு வரை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் ரயில்வே அமைச்சராக லாலு பிரசாத் பதவி வகித்தார். அப்போது ரயில்வேயின் குரூப்-டி பணிகளில் சிலா் விதிமுறைகளுக்குப் புறம்பாக நியமிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com