பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

சாதி கேட்டு காதலர்களைத் தொல்லை செய்த மூவர் கைது!

மங்களூருவில் பொது இடத்தில் காதலர்களின் சாதியைக் கேட்டு தொல்லை செய்த மூவரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

News image
கோப்புப்படம்.
Updated On :23 டிசம்பர் 2023, 10:26 am

DIN

மங்களூருவில் உள்ள உணவகம் ஒன்றில் காதலர்களை அவர்களது அடையாள அட்டை கேட்டு மிரட்டி தொந்தரவு செய்த நபர்களைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

கேரளாவைச் சேர்ந்த அந்த இளம் ஜோடியின் சாதியைத் தெரிந்துகொள்வதற்காக அவர்களது அடையாள அட்டைகளைக் கேட்டு ஒருவர் அவர்களைத் தொந்தரவு செய்துள்ளார். 

அவரைத் தவிர்க்க முயன்ற ஜோடியை, பொது இடத்தில் கத்தி தொந்தரவு செய்துள்ளார். இருவரும் அந்த இடத்திலிருந்து வெளியேறிய பின்னரும் அவர்களைப் பின்தொடர்ந்து தொல்லை செய்துள்ளார். 

ஆட்டோவில் ஏறிய அந்த ஜோடியை நிறுத்தி, மேலும் இரண்டு நபர்களுடன் சேர்ந்து துன்புறுத்தியுள்ளார். ஆட்டோ ஓட்டுநர் அளித்த புகாரின் அடிப்படையில் அந்த மூவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.