6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கேரளத்தில் 2 அமைச்சர்கள் ராஜிநாமா

கேரள அமைச்சரவையில் இருந்து இரண்டு அமைச்சர்கள் தங்களது பதவியை ராஜிநாமா செய்துள்ளனர். 

News image
ஆண்டனி ராஜு.
Updated On :24 டிசம்பர் 2023, 9:29 am

DIN

கேரள அமைச்சரவையில் இருந்து இரண்டு அமைச்சர்கள் தங்களது பதவியை ராஜிநாமா செய்துள்ளனர். 

கேரளத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் ஆண்டனி ராஜுவும், துறைமுகத்துறை அமைச்சர் அகமது தேவராகோவிலும் பதவி வகித்து வந்தனர். இந்த நிலையில் இருவரும் தங்களது அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்துள்ளனர். கேரள முதல்வர் முதல்வர் பினராயி விஜயனை அவரது இல்லத்தில் இன்று சந்தித்து ராஜிநாமா கடிதத்தை அளித்தனர். 

அவர்களுக்குப் பதிலாக கே.பி.கணேஷ் குமார், கடன்னப்பள்ளி ராமச்சந்திரன் ஆகியோர் புதிய அமைச்சர்களாக பொறுப்பேற்க உள்ளனர். இருவரும் டிசம்பர் 29ஆம் தேதி அமைச்சர்களாக பதவியேற்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், கே.பி.கணேஷ் குமாருக்கு போக்குவரத்துத் துறையும், ராமச்சந்திரனுக்கு துறைமுகத்துறையும் ஒதுக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. 

இடதுசாரி கூட்டணி ஒப்பந்தத்தின் அடிப்படையில், கூட்டணி கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்கும் வகையில் இரண்டு அமைச்சர்கள் ராஜிநாமாக செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.