ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

ரெளடி கும்பல்.. சக கடைக்காரரை மிரட்டிய நபர் கைது!

கடனை அடைக்க இப்படியொரு திட்டம் தீட்டியதாக கைது செய்யப்பட்டவர் கூறியுள்ளார்.

News image
கோப்பு
Updated On :28 டிசம்பர் 2023, 11:34 am

DIN

35 வயதான நகை கடைக்காரர், சக நகை கடைக்காரரை ரெளடி கும்பலின் பெயரைச் சொல்லி மிரட்டி பணம் பறிக்க முயன்றபோது கைது செய்யப்பட்டுள்ளார்.

தெற்கு தில்லியில் உள்ள சங்கம் விஹார் பகுதியில் நகை கடை வைத்திருப்பவர் விபின் குப்தா. இவர் பெரிய கடனில் இருந்ததால் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தியுள்ளார். குரல் மாற்றும் கருவியைப் பயன்படுத்தி அவர் புகார்தாரரை ரூ. 2 கோடி பணம் மற்றும் 2 கிலோ தங்கம் கேட்டு மிரட்டியுள்ளார்.

இது குறித்து காவலர்கள் தெரிவித்தாவது: “புகார்தாரர் சங்கம் விஹார் பகுதியில் நகை கடை வைத்துள்ளார். இரண்டு வெவ்வேறு அலைபேசி எண்களில் இருந்து டிச.14 முதல் அவருக்கு அழைப்பு வந்ததாகவும் அழைப்பில் நீரஜ் பவனா ரெளடி கும்பலின் ஆள் என பேசி ஒருவர் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். ஜன.1-க்குள் தரவிட்டால் விபரீதமாக நடக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது”

புகார்தாரருக்கு வந்த அழைப்புகளின் எண்ணைப் பின்தொடர்ந்து இதனை செய்தது விபின் குப்தா என காவலர்கள் கண்டறிந்துள்ளனர். அவரிடம் இருந்து கார், கீபேட் அலைபேசி, 3 சிம் கார்டுகள், குரல் மாற்றும் கருவி உள்ளிட்டவற்றைக் காவல்துறை பறிமுதல் செய்துள்ளது.

குப்தா அவரது நண்பரோடு இணைந்து இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.