உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் அயோத்தி பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தில்லி, உத்தரப் பிரதேசம் போன்ற வட மாநிலங்களில் கடுமையான பனிப்பொழிவு நிலவிவருவதையடுத்து அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன.
பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை கோயில் நகருக்கு வருகை தருவதை முன்னிட்டு ஏற்பாடுகளைப் பார்வையிட உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று(டிச.28) அயோத்திக்குச் செல்ல திட்டமிட்டிருந்தார்.
லக்னௌவில் கடுமையான பனிமூட்டம் காரணமாக யோகி ஆதித்யநாத்தின் அயோத்தி பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனிடையே வெள்ளிக்கிழமையான நாளை அயோத்திக்குச் சென்று அங்கு நடைபெற்றுவரும் ஏற்பாடுகளை முதல்வர் யோகி ஆய்வு செய்ய உள்ளார்.
2024, ஜனவரி 22ஆம் தேதி அயோத்தி ராமர் கோயிலில் பிரம்மாண்டமாகக் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.