சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

அயோத்தி: உஜ்வாலா திட்ட பயனாளியின் வீட்டில் தேநீர் அருந்திய பிரதமர் மோடி

அயோத்தியில் உஜ்வாலா யோஜனா திட்டத்தின் 10 கோடியாவது பயனாளி வீட்டுக்குச் சென்ற பிரதமர் மோடி தேநீர் அருந்தினார்.

News image
Updated On :30 டிசம்பர் 2023, 4:27 pm

DIN

அயோத்தியில் உஜ்வாலா யோஜனா திட்டத்தின் 10 கோடியாவது பயனாளி வீட்டுக்குச் சென்ற பிரதமர் மோடி தேநீர் அருந்தினார்.

அயோத்தியில் ரூ.11,100 கோடிக்கும் அதிக மதிப்பில் பணி நிறைவடைந்த பல்வேறு உள்கட்டமைப்புத் திட்டங்களை தொடங்கிவைத்ததோடு, புதிய திட்டங்களுக்கு பிரதமா் மோடி சனிக்கிழமை அடிக்கல் நாட்டினார். உத்தர பிரதேசத்தின் இதர பகுதிகளில் ரூ.4,600 கோடிக்கும் அதிக மதிப்பிலான திட்டங்களை தொடங்கிவைத்தார்.

அயோத்தியில் அதிநவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள விமான நிலையம், பல்வேறு வசதிகளுடன் மறுசீரமைக்கப்பட்ட அயோத்தி ரயில் நிலையம், நகரில் விரிவுபடுத்தப்பட்டு அழகூட்டப்பட்ட சாலைகள் உள்ளிட்டவை இதில் அடங்கும். பின்னர் ’பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் 10 கோடியாவது பயனாளி மீரா மாஞ்சி வீட்டிற்கு பிரதமர் மோடி திடீரென சென்றார். 

தொடர்ந்து அங்கு தேநீர் அருந்திய பிரதமர் மோடி, மீராவின் குடும்பத்தினரிடம் நலம் விசாரித்தார். அப்போது, மீரா தனக்கு இலவச எரிவாயு மற்றும் தங்குமிடம் கிடைத்துள்ளதாக பிரதமரிடம் தெரிவித்தார். இதையடுத்து, கோயில் நகரத்தில் நடைபெற்ற பேரணியில் பேசிய மோடி, “இன்று உஜ்வாலா எரிவாயு இணைப்பின் 10-வது கோடி பயனாளியின் வீட்டில் தேநீர் அருந்தியதை குறிப்பிட்டார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.