டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

மகாராஷ்டிரம், மேற்கு வங்கத்தில் புதிய தலைமைச் செயலாளர்கள் நியமனம்!

மகாராஷ்டிரம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களுக்கு புதிய தலைமைச் செயலாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

News image
நிதின் கரீர், பி.பி.கோபாலிகா
Updated On :31 டிசம்பர் 2023, 1:20 pm

DIN

மகாராஷ்டிரம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களுக்கு புதிய தலைமைச் செயலாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

மகாராஷ்டிர மாநிலத்தின் புதிய தலைமைச் செயலாளராக நிதின் கரீர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

1988-ஆம் ஆண்டு பேட்ச் ஐஏஎஸ் அதிகாரியான நிதின் கரீர் தற்போது கூடுதல் தலைமைச் செயலாளராக (நிதித்துறை) பணியாற்றி வருகிறார். இவர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை தலைமைச் செயலாளராக பொறுப்பேற்கிறார். 

அதேபோல, மேற்கு வங்க மாநிலத்தின் புதிய தலைமைச் செயலாளராக பி.பி.கோபாலிகா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

1989-ஆம் ஆண்டு பேட்ச் ஐஏஎஸ் அதிகாரியான பி.பி.கோபாலிகா போக்குவரத்து, கால்நடை மற்றும் பணியாளர் நலத்துறை செயலாளராக பணியாற்றி வந்தார். 

தற்போதுள்ள தலைமைச் செயலாளர் ஹெச்.கே.திவிவேதியை தொடர்ந்து புதிய தலைமைச் செயலாளராக பொறுப்பேற்க உள்ள பி.பி.கோபாலிகா அடுத்த ஐந்து மாதங்கள் மட்டுமே இப்பொறுப்பில் இருப்பார். 2024 மே 31-ஆம் தேதி இவர் பணி ஓய்வு பெற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.