காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

பெங்களூரு - மைசூரு விரைவுச் சாலைக்கு பெயர் வைப்பதில் குழப்பம்

பெங்களூரு - மைசூரு விரைவுச் சாலைக்கு பெயர் வைப்பதில் அரசியல் கட்சிகள் அதிக ஆர்வம் காட்டி வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெங்களூரு - மைசூரு விரைவுச் சாலைக்கு பெயர் வைப்பதில் குழப்பம்

Published On :

பெங்களூரு: கர்நாடகத்துக்கு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இன்னும் ஒரு சில மாதங்களே இருக்கும் நிலையில், 119 கிலோ மீட்டர் தொலைவுள்ள பெங்களூரு - மைசூரு விரைவுச் சாலைக்கு பெயர் வைப்பதில் அரசியல் கட்சிகள் அதிக ஆர்வம் காட்டி வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விரைவில் இந்த விரைவுச் சாலை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறந்துவிடப்படவிருக்கிறது. இது பெங்களூரு, ராமநகர், மாண்டியா, மைசூரு மாவட்டங்களை இணைக்கவிருக்கிறது. இப்பகுதிகளில் இருக்கும் அதிகப்படியான சமுதாய மக்கள் வொக்காலிகா. இவர்களின் வாக்குகளை கவரும் வகையில் பெயரைச் சூட்ட பாஜக திட்டமிட்டுள்ளது.

இவர்கள் வழக்கமாக காங்கிரஸ் அல்லது ஜனதா தளத்துக்கு வாக்களிப்பவர்களாக இருக்கிறார்கள். எனவே, இவர்களை வாக்கு வங்கியை தம் பக்கம் திருப்ப, விரைவுச் சாலைப் பெயரை மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று பாஜக நினைப்பதில் எந்த தவறும் இல்லை என்றே கூறுகிறார்கள்.

ஆனால், இதுவரை எந்தப் பெயரும் உறுதி செய்யப்படவில்லை என்றும், பெயரை தேர்வு செய்வதில் பலகட்ட ஆலோசனைகள் நடப்பதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.