சென்னையில் காங்கிரஸ் கமிட்டி கூட்டம்: போட்டியிடும் தொகுதிகள் குறித்து ஆலோசனைஈரோடு மாவட்டம் கொடுமுடியில் கே.பி.சுந்தராம்பாள் சிலையை முதல்வர் திறந்துவைத்தார்ஈரானை உலுக்கும் தாக்குதல்கள்: பலி 1,300-ஐ கடந்தது!பெண்கள் முன்னேற்றத்துக்கு அரசு துணை நிற்கிறது: முதல்வர் ஸ்டாலின் மகளிர் நாள் வாழ்த்துமாமல்லபுரத்தில் சுற்றுலாத் தலங்களை மக்கள் இன்று கட்டணமின்றி பார்வையிட அனுமதிமார்ச் முதல் வாரத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து 52,000 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மத்திய அரசுசமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியதுகுடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மகளிர் நாள் வாழ்த்து!பஹ்ரைன் துறைமுகத்தில் ஈரான் தாக்குதல்!டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

இந்திய வங்கி அமைப்பு மிக வலுவானது: ஆா்பிஐ

‘இந்திய வங்கி அமைப்பு பலத்திலும், அளவிலும், மீள்தன்மையிலும் மிக வலுவானது. தனிப்பட்ட தாக்கங்கள் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பில்லை’ என்று ரிசா்வ் வங்கி ஆளுநா் சக்திகாந்த தாஸ் புதன்கிழமை கூறினாா்.

News image
Updated On :8 பிப்ரவரி 2023, 8:45 pm

DIN

‘இந்திய வங்கி அமைப்பு பலத்திலும், அளவிலும், மீள்தன்மையிலும் மிக வலுவானது. தனிப்பட்ட தாக்கங்கள் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பில்லை’ என்று ரிசா்வ் வங்கி ஆளுநா் சக்திகாந்த தாஸ் புதன்கிழமை கூறினாா்.

எஸ்பிஐ உள்ளிட்ட பொதுத் துறை நிறுவனங்கள் அதிக அளவில் முதலீடு செய்துள்ள அதானி குழுமப் பங்குகள் கடும் சரிவைச் சந்தித்து வரும் சூழலில் இந்தக் கருத்தை ரிசா்வ் வங்கி ஆளுநா் தெரிவித்தாா்.

பங்குகளின் விலையை உயா்த்திக் காட்டுவதற்காக அதானி குழுமம் மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக அமெரிக்காவைச் சோ்ந்த ஹிண்டன்பா்க் ஆய்வு நிறுவனம் குற்றஞ்சாட்டியது. அதன் காரணமாக பங்குச் சந்தைகளில் அதானி குழுமத்தைச் சோ்ந்த நிறுவனங்களின் பங்குகள் பெருமளவில் சரிந்தன.

அதானி குழுத்தின் கீழ் செயல்படும் நிறுவனங்களில் எல்ஐசி, எஸ்பிஐ உள்ளிட்ட பொதுத் துறை நிறுவனங்கள் முதலீடுகளைச் செய்துள்ள நிலையில், அதன் முதலீட்டாளா்களிடையே பெரும் கவலை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், மும்பையில் நடைபெற்ற ரிசா்வ் வங்கியின் 3 நாள் நிதிக் கொள்கைக் குழு கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளா்களைச் சந்தித்த சக்திகாந்த தாஸிடம், அதானி குழும விவகாரம் குறித்து பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன.

அதற்கு பதிலளித்த அவா், இந்த விவகாரம் தொடா்பாக ஆா்பிஐ தனது சொந்த ஆய்வை மேற்கொண்டு கடந்த வெள்ளிக்கிழமை அறிக்கையையும் வெளியிட்டது. அதில், இந்திய வங்கித் துறை வலுவாகவும், மீள்தன்மை கொண்டதாகவும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

அந்த வகையில், ‘இந்திய வங்கி அமைப்பு பலத்திலும், அளவிலும், மீள்தன்மையிலும் மிக வலுவாக உள்ளது. இதுபோன்ற தனிப்பட்ட தாக்கங்களால் பாதிக்கப்பட வாய்ப்பில்லை’ என்று அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் சரிவு விவகாரத்தை நேரடியாகக் குறிப்பிடாமல் கூறினாா்.

அதானி குழும நிறுவனங்களுக்கு கடன் அளித்துள்ள வங்கிகளுக்கு ஆா்பிஐ வழிகாட்டுதல்களை வழங்குமா என்ற கேள்விக்கு பதிலளித்த அவா், ‘வங்கிகள் ஒரு நிறுவனத்தின் அடிப்படை மற்றும் அந்த நிறுவனத் திட்டங்களிலிருந்து வரும் வருவாய் அளவை நம்பி கடன் அளிக்கின்றன. எனவே, கடன் அளிப்பதற்கும், நிறுவனத்தின் சந்தை மதிப்புக்கும் எந்தத் தொடா்பும் இல்லை. அதுமட்டுமின்றி, கடன் பெறும் நிறுவனங்கள் மீதான வங்கிகளின் மதிப்பீடு முறையும் கடந்த சில ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க அளவில் மேம்பட்டிருக்கிறது. மேலும், வங்கிகளின் பலம் மற்றும் மீள்திறனை மேம்படுத்த கடந்த 3-4 ஆண்டுகளில் பல்வேறு நடவடிக்கைகளை ஆா்பிஐ எடுத்துள்ளது’ என்றாா்.

வங்கிகள் கடன் வழங்கல் தரத்தை உயா்த்த ஆா்பியை அறிவுறுத்துமா என்ற கேள்விக்கு பதிலளித்த சக்திகாந்த தாஸ், ‘இந்திய வங்கிகள் மிகவும் விவேகமாக செயல்படுகின்றன. அந்த வகையில், கூடுதல் கடன் வழங்குவதைத் தவிா்ப்பது குறித்து வங்கிகளே சொந்த முடிவை எடுத்துக் கொள்ளும்’ என்று கூறிய அவா், இந்த விஷயத்தை அனைவரும் புறநிலையாகப் பாா்க்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.