நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

3 செயற்கைக்கோள்கள் நிலைநிறுத்தம்! எஸ்.எஸ்.எல்.வி. டி-2 திட்டம் வெற்றி: இஸ்ரோ

எஸ்.எஸ்.எல்.வி திட்டம் இந்தியாவில் முதல்முறையாக வெற்றி பெற்றுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

News image

சோம்நாத்

Updated On :10 பிப்ரவரி 2023, 9:56 am IST


எஸ்.எஸ்.எல்.வி திட்டம் இந்தியாவில் முதல்முறையாக வெற்றி பெற்றுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. ராக்கெட்டுடன் அனுப்பப்பட்ட 3 செயற்கைக்கோள்களும் புவியின் தாழ்வட்ட சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டன. 

எஸ்எஸ்எல்வி டி-1 ராக்கெட் மூலம் ஏற்கெனவே, மைக்ரோ செயற்கைக்கோளை கடந்த ஆகஸ்ட் மாதம் இஸ்ரோ விண்ணுக்கு அனுப்பியது. ஆனால், தொழில்நுட்ப பிரச்னை காரணமாக திட்டம் வெற்றியடையவில்லை. 

அதனைத் தொடர்ந்து தற்போது, மேம்படுத்தப்பட்ட எஸ்எஸ்எல்வி டி-2 ரக ராக்கெட்டை இஸ்ரோ வடிவமைத்தது. இந்த எஸ்எஸ்எல்வி டி-2 ராக்கெட்டில் முதன்மைச் செயற்கைக்கோளான இஒஎஸ்-7, இந்தியாவின் ஸ்பேஸ் கிட்ஸ் அமைப்பின் மூலம் 750 பள்ளி மாணவிகளால் வடிவமைக்கப்பட்ட ஆசாதிசாட்-2, அமெரிக்காவின் ஜானஸ் ஆகிய 3 செயற்கைக்கோள்களும் செலுத்தப்பட்டன.

இந்த மூன்று செயற்கைக்கோள்களும் தற்போது வெற்றிகரமான அதன் சுற்றுவட்டப்பாதைகளில் நிலைநிறுத்தப்பட்டன. 

இதனைத் தொடர்ந்து பேசிய இஸ்ரோ தலைவர் சோம்நாத், மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. சென்ற ஆண்டு எஸ்எஸ்எல்வி டி-1 திட்டம் தோல்வியில் முடிந்தது. அந்த தோல்வியில் நிறைய கற்றுக்கொண்டோம். தவறுகளைக் கண்டறிந்து அதில் அதிக கவனம் செலுத்தினோம். தற்போது எஸ்எஸ்எல்வி டி-2 திட்டம் வெற்றி பெற்றுள்ளது. இது எங்கள் கூட்டு முயற்சிக்கு கிடைத்த பரிசு. செயற்கைக்கோள்களுக்காக பணியாற்றிய மூன்று குழுக்களுக்கும் வாழ்த்துகள் எனக் குறிப்பிட்டார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.