சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

3 செயற்கைக்கோள்கள் நிலைநிறுத்தம்! எஸ்.எஸ்.எல்.வி. டி-2 திட்டம் வெற்றி: இஸ்ரோ

எஸ்.எஸ்.எல்.வி திட்டம் இந்தியாவில் முதல்முறையாக வெற்றி பெற்றுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

News image
சோம்நாத்
Updated On :10 பிப்ரவரி 2023, 4:26 am

DIN


எஸ்.எஸ்.எல்.வி திட்டம் இந்தியாவில் முதல்முறையாக வெற்றி பெற்றுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. ராக்கெட்டுடன் அனுப்பப்பட்ட 3 செயற்கைக்கோள்களும் புவியின் தாழ்வட்ட சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டன. 

எஸ்எஸ்எல்வி டி-1 ராக்கெட் மூலம் ஏற்கெனவே, மைக்ரோ செயற்கைக்கோளை கடந்த ஆகஸ்ட் மாதம் இஸ்ரோ விண்ணுக்கு அனுப்பியது. ஆனால், தொழில்நுட்ப பிரச்னை காரணமாக திட்டம் வெற்றியடையவில்லை. 

அதனைத் தொடர்ந்து தற்போது, மேம்படுத்தப்பட்ட எஸ்எஸ்எல்வி டி-2 ரக ராக்கெட்டை இஸ்ரோ வடிவமைத்தது. இந்த எஸ்எஸ்எல்வி டி-2 ராக்கெட்டில் முதன்மைச் செயற்கைக்கோளான இஒஎஸ்-7, இந்தியாவின் ஸ்பேஸ் கிட்ஸ் அமைப்பின் மூலம் 750 பள்ளி மாணவிகளால் வடிவமைக்கப்பட்ட ஆசாதிசாட்-2, அமெரிக்காவின் ஜானஸ் ஆகிய 3 செயற்கைக்கோள்களும் செலுத்தப்பட்டன.

இந்த மூன்று செயற்கைக்கோள்களும் தற்போது வெற்றிகரமான அதன் சுற்றுவட்டப்பாதைகளில் நிலைநிறுத்தப்பட்டன. 

இதனைத் தொடர்ந்து பேசிய இஸ்ரோ தலைவர் சோம்நாத், மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. சென்ற ஆண்டு எஸ்எஸ்எல்வி டி-1 திட்டம் தோல்வியில் முடிந்தது. அந்த தோல்வியில் நிறைய கற்றுக்கொண்டோம். தவறுகளைக் கண்டறிந்து அதில் அதிக கவனம் செலுத்தினோம். தற்போது எஸ்எஸ்எல்வி டி-2 திட்டம் வெற்றி பெற்றுள்ளது. இது எங்கள் கூட்டு முயற்சிக்கு கிடைத்த பரிசு. செயற்கைக்கோள்களுக்காக பணியாற்றிய மூன்று குழுக்களுக்கும் வாழ்த்துகள் எனக் குறிப்பிட்டார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.