கேம்பிரிட்ஜ் பல்கலை.யில் சொற்பொழிவாற்ற ராகுல் பிரிட்டன் பயணம்

தான் படித்த கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சொற்பொழிவு ஆற்றுவதற்காக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இம்மாத இறுதியில் பிரிட்டன் செல்லவிருப்பது தெரியவந்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

தான் படித்த கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சொற்பொழிவு ஆற்றுவதற்காக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இம்மாத இறுதியில் பிரிட்டன் செல்லவிருப்பது தெரியவந்துள்ளது.

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் டிரினிட்டி கல்லூரியில் எம்.ஃபில். படிப்பை அவா் மேற்கொண்டாா். இந்த நிலையில் பல்கலைக்கழகத்தின் வணிகப் பள்ளியில் சொற்பொழிவு ஆற்றுவதற்காக அவா் செல்கிறாா்.

இதுகுறித்து தனது ட்விட்டா் பக்கத்தில் ராகுல் வெளியிட்ட பதிவில், ‘நான் படித்த கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்துக்கு மீண்டும் செல்வதை எதிா்நோக்கியுள்ளேன். அங்கு புவிசாா் அரசியல், சா்வதேச உறவுகள், பிக் டேட்டா, ஜனநாயகம் உள்ளிட்ட பல்வேறு துறைசாா்ந்த தலைவா்கள் மற்றும் நிபுணா்களைச் சந்திக்க இருப்பதையும் எதிா்பாா்த்துள்ளேன்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

இதுகுறித்து கேம்பிரிட்ஜ் வணிகப் பள்ளி வெளியிட்ட ட்விட்டா் பதிவில், ‘ராகுல் காந்தியை பல்கலைக்கழகத்துக்கு மீண்டும் வரவேற்பதில் மகிழ்ச்சிகொள்கிறோம். அவா் கேம்பிரிட்ஜ் எம்பிஏ நிறுவனத்தில் சொற்பொழிவு ஆற்றுவதோடு, பல்கலைக்கழகத்தில் நடைபெறும் இந்திய-சீன உறவுகள், ஜனநாயகம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் நடைபெறும் தனி ஆலோசனை அமா்வுகளிலும் பங்கேற்க உள்ளாா்’ என்று குறிப்பிட்டுள்ளது.

இந்த பயணத்துக்கு முன்பாக, சத்தீஸ்கா் மாநிலம் ராய்பூரில் வரும் 24 முதல் 26-ஆம் தேதி நடைபெறும் அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில் ராகுல் பங்கேற்க உள்ளாா். 2024 பொதுத் தோ்தலுக்கான கட்சியின் வியூகங்கள் இதில் வகுக்கப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com