உத்தரப் பிரதேசத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடைபெற்று வரும் நிலையில், 4 லட்சம் மாணவர்கள் தேர்வை எழுதவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்காக காலை, மதியம் என இரு பிரிவுகளாக நடைபெற்ற முதல் நாள் தேர்வில் சுமார் 4 லட்சம் மாணவர்கள் பங்கேற்கவில்லை என அம்மாநில கல்வித் துறை தெரிவித்துள்ளது.
காலை நடைபெற்ற தேர்வில் 2,18,189 பேரும், மதியம் நடைபெற்ற தேர்வில் 1,83,865 பேரும் பொதுத்தேர்வை எழுதவில்லை.
மேலும், மாநிலம் முழுவதும் நடைபெற்றத் தேர்வில், முறைகேடில் ஈடுபட்டதாக 9 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.