திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

வில்-அம்பு சின்னத்தைத் திருடிய திருடனுக்கு பாடம் புகட்ட வேண்டும்: உத்தவ் தாக்கரே

சிவசேனையின் வில் அம்பு சின்னம் திருடப்பட்டு விட்டதாகவும், சின்னத்தைத் திருடியவர்களுக்கு சரியான பாடம் கற்றுத் தர வேண்டும் எனவும் சிவசேனைத் தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

News image
Updated On :18 பிப்ரவரி 2023, 3:55 pm IST

சிவசேனையின் வில் அம்பு சின்னம் திருடப்பட்டு விட்டதாகவும், சின்னத்தைத் திருடியவர்களுக்கு சரியான பாடம் கற்றுத் தர வேண்டும் எனவும் சிவசேனைத் தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

கட்சித் தலைவர்களுடனான கூட்டத்துக்கு முன்னதாக மும்பையில் தனது இல்லம் முன்பு திரண்டிருந்த சிவசேனை ஆதரவாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார். 

சிவசேனைத் தலைவர் உத்தவ் தாக்கரேவுக்கு பேரதிர்ச்சி ஏற்படுத்தும் விதமாக ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனையை இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது. கட்சியின் பெயரினையும், அதன் சின்னமான வில் அம்பினையும் ஷிண்டே தலைமையிலான சிவசேனை பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
 

1966 ஆம் ஆண்டு பால் தாக்கரேவால் மண்ணின் மைந்தர்களுக்கு நீதி என்ற தத்துவத்தில் சிவசேனை கட்சி தொடங்கப்பட்டது. சிவசேனை தொடங்கிய காலத்திலிருந்து முதல் முறையாக தாக்கரே குடும்பத்துக்கு கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை இழக்கும் சூழல் உருவாகியுள்ளது. 

தனது இல்லத்தின் முன்பு ஆதரவாளர்களை சந்தித்த உத்தவ் தாக்கரே பேசியதாவது: வில் அம்பு சின்னம் திருடப்பட்டிருக்கிறது. சின்னத்தை திருடியவர்களுக்கு பாடம் கற்றுக் கொடுக்க வேண்டியுள்ளது. திருடன் பிடிபட்டுவிட்டான். நான் அந்தத் திருடனுக்கு சவால் விடுகிறேன். அந்தத் திருடன் வில் அம்புடன் களத்துக்கு வரும் போது தீப்பந்தத்தினால் பதிலடி கொடுப்போம். சிவசேனை ஆதரவாளர்கள் மாநிலம் முழுவதும் பயணம் மேற்கொண்டு கட்சியின் ஆதரவாளர்களை ஒருங்கிணைக்க வேண்டும் என்றார்.

உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனைக்கு தீப்பந்தம் சின்னத்தை கடந்த ஆண்டு தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. இந்த சின்னமே புனேவின் கஸ்பா பெத் மற்றும் சின்ச்வாத் தொகுதிகளின் இடைத்தேர்தல் வரை நீடிக்கும் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த இரு தொகுதிகளுக்குமான இடைத்தேர்தல் வருகிற பிப்ரவரி 26 ஆம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.