ஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

தில்லியில் இருந்து கிளம்பிய விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

தில்லியில் இருந்து ஒடிசா கிளம்பிய விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

News image
இண்டிகோ(கோப்புப்படம்)
Updated On :20 பிப்ரவரி 2023, 11:32 am

DIN

தில்லியில் இருந்து ஒடிசா கிளம்பிய விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இண்டிகோ நிறுவனத்தின் 6இ 6191 என்ற விமானம் தலைநகர் தில்லியிலிருந்து ஒடிசா மாநிலம் தியோகார் விமான நிலையத்திற்கு இன்று காலை கிளம்பியது.

விமானம் கிளம்பிய சிறுது நேரத்திலேயே விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் வந்ததை தொடர்ந்து, உடனடியாக விமானத்தை லக்னெள விமான நிலையத்தில் தரையிறக்க விமானிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

பகல் 12.20 மணியளவில் லக்னெள விமான நிலையம் வந்த இண்டிகோ விமானத்தை தனிப் பகுதியில் நிறுத்தி, தீவிர சோதனை நடத்தியதில் வெடிகுண்டு மிரட்டல் புரளி எனத் தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்ட நிலையில், இண்டிகோ விமானம் தியோகாருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

மேலும், விமானத்தில் பயணித்த பயணிகள் மற்றும் ஊழியர்களின் எண்ணிக்கை இதுவரை வெளியாகவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.