அமெரிக்க அதிபர் ஜோ பைடன் திடீர் பயணமாக உக்ரைன் சென்றுள்ளார்.
அமெரிக்காவின் நேட்டோ படையில் உக்ரைன் சேருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷியா, உக்ரைன் மீது போர் தொடுத்தது. அதன்படி, ரஷியா - உக்ரைன் இடையேயான போர் ஒரு வருடத்தை எட்டியுள்ளது.
இதில் உக்ரைனுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பல வகைகளில் உதவி வருகின்றன.
இதையும் படிக்க | உக்ரைனில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்!
போரின் இடையே உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஸெலென்ஸ்கி, ஒருமுறை அமெரிக்கா சென்று ஜோ பைடனை நேரில் சந்தித்துப் பேசினார்.
இதையடுத்து ஐரோப்பிய சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன், திடீர் பயணமாக உக்ரைன் சென்றுள்ளார். தலைநகர் கீவில், போரில் உயிர் நீத்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் கலந்துகொண்டதாகக் கூறப்படுகிறது. ஜோ பைடனும் ஸெலென்ஸ்கியும் நடந்து செல்லும் விடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
ரஷியா - உக்ரைன் போர் ஓராண்டாக நீடித்து வரும் நிலையில் ஜோ பைடனின் இந்த பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க | 'தேர்தல் ஆணையம் கலைக்கப்பட வேண்டும்' - உத்தவ் தாக்கரே