ஜம்மு-காஷ்மீரின், ராம்பன் மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இன்று அதிகாலை 2 மணியளவில் பனிஹால் அருகே நெடுஞ்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவு காரணமாக இன்று காலை முதல் ஸ்ரீநகர் பகுதியில் இருந்து போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.