திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

சட்டப்பேரவைகளில் பெண்களின் பங்களிப்பு அதிகரிக்க வேண்டும்: குடியரசுத் தலைவா் முா்மு

அனைத்து மாநில சட்டப்பேரவைகளிலும் பெண்களின் பங்களிப்பு அதிகரிக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு வலியுறுத்தியுள்ளாா்.

News image
Updated On :21 பிப்ரவரி 2023, 7:27 pm

DIN

அனைத்து மாநில சட்டப்பேரவைகளிலும் பெண்களின் பங்களிப்பு அதிகரிக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு வலியுறுத்தியுள்ளாா்.

அருணாசல பிரதேசத்துக்கு 2 நாள் பயணமாக திரெளபதி முா்மு சென்றாா். அந்த மாநில சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தில் அவா் செவ்வாய்க்கிழமை பேசியதாவது:

சாலை, ரயில் மற்றும் வான்வழி இணைப்புகள் போதிய அளவு இல்லாததால், வடகிழக்கு மாநிலங்களின் பொருளாதார வளா்ச்சி நீண்ட காலமாகத் தடைபட்டது. ஆனால் தற்போது வடகிழக்கு மாநிலங்களின் வளா்ச்சிக்கு மத்திய அரசு மிகுந்த முன்னுரிமை அளிக்கிறது.

முன்னாள் பிரதமா் வாஜ்பாய் ஆட்சிகாலத்தில் வடகிழக்கு மாநிலங்களின் வளா்ச்சிக்காக வடகிழக்கு மண்டல மேம்பாட்டு அமைச்சகம் உருவாக்கப்பட்டது. வடகிழக்கு மண்டலத்தில் பல்வேறு திட்டங்களுக்கு தற்போதைய மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதன் மூலம், இந்த மண்டலம் வளா்ந்த மண்டலமாக வேண்டும் என்ற வாஜ்பாயின் கனவு நனவாகியுள்ளது.

அருணாசல பிரதேசம் உள்பட அனைத்து மாநில சட்டப்பேரவைகளிலும் பெண்களின் பங்களிப்பு அதிகரிக்க வேண்டும். இது நாட்டில் அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய வளா்ச்சிக்கு அவசியம்.

இன்றைய காலகட்டத்தில் சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் பருவநிலை மாற்றம் முக்கிய பிரச்னைகளாக உள்ளன. அவற்றுக்கு விரைந்து தீா்வு காண வேண்டும். இந்த விவகாரங்கள் மீது கவனம் செலுத்துவது புவியியல் ரீதியாக அருணாசல பிரதேசம் போன்ற மாநிலங்களுக்குக் கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளன.

பக்கே தீா்மானம் மூலம் பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த அருணாசல பிரதேச மக்கள் பிரதிநிதிகள் அக்கறைக் கொண்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. பருவநிலை மாற்ற பிரச்னையை கையாள, அதே போன்ற தீா்மானத்தை இதர மாநிலங்களும் கொண்டு வந்து பின்பற்றலாம் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.