தில்லி கலால் வரிக் கொள்கையில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் பணமோசடி வழக்கில் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலின் உதவியாளர் பிபவ் குமாரிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தினர்.
பணமோசடி தடுப்புச் சட்டத்தின் விதிகளின் கீழ் பிபவ் குமாரின் வாக்குமூலத்தை புலனாய்வாளர்கள் பதிவு செய்து வருகின்றனர்.
கலால் கொள்கை 2021-22-ஐ அமல்படுத்தியதில் சிசோடியா கோடிக்கணக்கில் ஊழல் புரிந்ததாக எதிர்க்கட்சியான பாஜக குற்றம்சாட்டியது. இதன்பேரில், சிசோடியா உள்ளிட்ட 15 போ் மீது சிபிஐ அதிகாரிகள் கடந்த ஆகஸ்டில் வழக்குப் பதிவு செய்தனர்.
தில்லி கலால் கொள்கை விவகாரத்தில் அமலாக்கத் துறையினா் இதுவரை இரண்டு குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்து ஜோஷி உள்பட 9 பேரைக் கைது செய்துள்ளனர். இந்நிலையில் இன்று கேஜரிவாலின் பிஏவிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.