கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

கர்நாடகத்தைத் தென்னிந்திய முதல் மாநிலமாக மாற்றுவோம்: அமித் ஷா

கர்நாடக மாநிலத்தை ஊழலில் இருந்து விடுவித்து தென்னிந்தியாவின் முதல் மாநிலமாக மாற்றுவோம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார். 

News image
Updated On :23 பிப்ரவரி 2023, 11:27 am

DIN

கர்நாடக மாநிலத்தை ஊழலில் இருந்து விடுவித்து தென்னிந்தியாவின் முதல் மாநிலமாக மாற்றுவோம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார். 

சந்தூரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய ஷா கூறுகையில், 

பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் முதல்வர் பிஎஸ் எடியூரப்பா மீது கர்நாடக மக்கள் நம்பிக்கை வைக்க வேண்டும். பாஜக ஆட்சிக்கு வந்தால் ஊழலை விடுவித்து தென்னிந்திய முதல் மாநிலமாக கர்நாடகாவை மாற்றுவோம். 

மல்லிகார்ஜுன கார்கே தலைமையிலான அமைப்பு மற்றும் ஜேடி(எஸ்) கட்சிகள் மக்களுக்கு நல்லது செய்ய முடியாத கட்சிகள் என்று குற்றம் சாடினார்.

ஒருபுறம் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக இந்தியாவை வலுப்படுத்துகிறது, மறுபுறம் ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் அதை சீரழித்து வருகிறது. 

பிரதமர் மோடி மற்றும் எடியூரப்பாவுக்கு ஒருமுறை வாய்ப்பளியுங்கள், கர்நாடகாவை ஊழலில் இருந்து விடுவித்து தென்னிந்தியாவின் முதல் மாநிலமாக மாற்றுவோம் என்று அவர் கூறினார். 

கர்நாடகத்தில் மே மாதத்திற்குள் சட்டப்பேரவை தேர்தல் நிகழ உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.