மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

மணிப்பூரில் குண்டு வெடிப்பு!

மணிப்பூரின் இம்பால் மேற்கு மாவட்டத்தில் உள்ள பொதுப்பணித்துறை பொறியாளரின் குடியிருப்பு அருகே வெடிகுண்டு வெடித்ததில் பிகாரைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளி ஒருவர் காயமடைந்தார். 

News image
Updated On :27 பிப்ரவரி 2023, 7:21 am

மணிப்பூரின் இம்பால் மேற்கு மாவட்டத்தில் உள்ள பொதுப்பணித்துறை பொறியாளரின் குடியிருப்பு அருகே வெடிகுண்டு வெடித்ததில் பிகாரைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளி ஒருவர் காயமடைந்தார். 

தங்கம்மெய்பண்ட் மெய்ஸ்னம் பகுதியில் உள்ள பொதுப்பணித் துறை பொறியாளர் வீட்டின் அருகே இந்த வெடிகுண்டு சம்பவம் நிகழ்ந்துள்ளதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கட்டடத் தொழிலாளியான விகாஷ் குமார் குடியிருப்பு வளாகத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது, இந்த குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

தொழிலாளி பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனம் சேதடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். 

சம்பவம் தொடர்பாக தடயவியல் அதிகாரிகளுடன் இணைந்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.