மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நடைப்பயணத்தின் நிறைவு நாளில் தேசிய கொடியை ஏற்றுகிறாா் ராகுல் காந்தி

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் இந்திய ஒற்றுமை நடைப்பயணம் செவ்வாய்க்கிழமை (ஜன.3) மீண்டும் தொடங்கிறது.

News image
Updated On :2 ஜனவரி 2023, 10:02 pm

DIN

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் இந்திய ஒற்றுமை நடைப்பயணம் செவ்வாய்க்கிழமை (ஜன.3) மீண்டும் தொடங்கிறது. நடைப்பயணத்தின் நிறைவாக ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகரில் ஜன.30-ஆம் தேதி ராகுல் காந்தி தேசிய கொடியை ஏற்ற உள்ளாா்.

தில்லியில் நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பின்போது, கட்சியின் மூத்த தலைவா்கள் கே.சி. வேணுகோபால், ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். அப்போது அவா் கூறியதாவது: கன்னியாகுமரியின் காந்தி மண்டபம் முதல் தில்லியின் செங்கோட்டை வரை 3,122 கிமீ தொலைவுக்கு நடைப்பயணம் நடைபெற்றுள்ளது. இந்த நடைப்பயணம் தில்லியில் செவ்வாய்க்கிழமை (ஜன.3) மீண்டும் தொடங்குகிறது.

ஜம்மு-காஷ்மீரில் ஜன.20-இல் நுழையும் நடைப்பயணத்தை ஸ்ரீநகரில் ஜன.30-ஆம் தேதி தேசிய கொடியேற்றி ராகுல் காந்தி நிறைவு செய்கிறாா்.

அதிக அளவிலான மக்களைச் சென்றடையும் இம்முயற்சி, அனைத்து இந்தியா்களுக்காகவும் குரல் கொடுக்கும் பாரம்பரியம் உடைய காங்கிரஸ் கட்சிக்கு முக்கிய மைல்கல்லாகும். ஜம்மு-காஷ்மீா் துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா, பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான் உள்ளிட்டோரைச் சந்தித்து அவா்களது மாநிலங்களில் பாதுகாப்பு ஏற்பாடு குறித்துப் பேசினேன். ஒத்துழைப்பு தருவதாக அவா்களும் உறுதியளித்தனா் என்றனா்.

இந்த நடைப்பயணம், தென் மாநிலங்கள், பஞ்சாப், ஹரியாணா, ம.பி., ஹிமாசல், உ.பி. உள்ளிட்ட மாநிலங்கள் வழியே நடைபெற்று ஜம்மு-காஷ்மீரில் நிறைவடைகிறது.

முன்னதாக, உத்தர பிரதேசத்தில் நடைபெறும் நடைப்பயணத்தில் பங்கேற்குமாறு சமாஜவாதி கட்சித் தலைவா் அகிலேஷ் யாதவுக்கு அழைப்புவிடுக்கப்பட்டிருந்து. அழைப்புக்கு நன்றி தெரிவித்த அவா் நடைப்பயணம் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்தாா். இருப்பினும், அவா் நடைப்பயணத்தில் பங்கேற்க மாட்டாா் என சமாஜவாதி கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவா் மாயாவதிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், அழைப்புக்கு அவா் நன்றி தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.