கொல்கத்தா: கொல்கத்தாவில் கணக்கில் வராத சுமார் ரூ.60 லட்சம் பணத்தை வைத்திருந்த 9 பேர் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் இன்று (ஜனவரி 3) தெரிவித்தனர்.
ஹவாலா பணப் பரிவர்த்தனைக்காக பெருமளவு பணம் இருப்பதாகக் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், கொல்கத்தா காவல்துறையின் துப்பறியும் ரவுடி தடுப்புப் பிரிவு நேற்று (திங்கள்கிழமை) மாலை புர்ராபஜார் பகுதியில் சோதனை நடத்தியது.
முதலில் ஒருவரை கைது செய்த காவல்துறையினர் அவரிடமிருந்து ரூ.9 லட்சத்தை பறிமுதல் செய்தனர். அதனைத் தொடர்ந்து, அவரிடம் நடத்திய விசாரணையில், புர்ராபஜார் பகுதியின் பல்வேறு பகுதிகளில் இருந்து மேலும் 8 பேர் கைது செய்யப்பட்டதாகவும், மொத்தம் ரூ.59,76,200 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அதே வேளையில் பிடிப்பட்டவர்களால் பணத்திற்கான ஆதாரத்தை வழங்க முடியவில்லை. எனவே, அவர்கள் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பணத்தின் ஆதாரம் மற்றும் அது எங்கு அனுப்பப்பட்டது என்பதை அறிய விசாரணை நடைபெற்று வருகிறது.
இது குறித்து வருமான வரித்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, கைது செய்யப்பட்டவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டிரம்ப்புடன் விவாதிக்க விருப்பமில்லை: போப் லியோ

ஈரான் மீதான கடற்படை முற்றுகையை ஆதரிக்கும் இஸ்ரேல்!

டெல்டா கடலோரப் பகுதி, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
கோபி நயினார் இயக்கத்தில் ராதிகா... காலனி - முதல்பார்வை போஸ்டர் வெளியீடு!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


