வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற காவலர்!

தில்லியில் ரஃபி மார்க் என்ற இடத்தில் காவல்துறை தலைமை கான்ஸ்டபிள் இன்று (ஜனவரி 4ம் தேதி) தீக்குளித்து தற்கொலை செய்ய முயன்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

News image
Updated On :4 ஜனவரி 2023, 4:33 pm

DIN


புதுதில்லி: தில்லியில் காவல்துறை தலைமை  காவலர் இன்று (ஜன. 4) தீக்குளித்து தற்கொலை செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரஃபி மார்க் என்ற இடத்தில் தீக்குளிக்க முயன்ற காவலர், குல்தீப் என அடையாளம் காணப்பட்டுள்ளது. தீக்குளிக்க முயன்ற அவரை அருகில் இருந்த சக காவலர்கள் தடுத்து காப்பாற்றியுள்ளனர்.

இது குறித்து காவல்துறையினர் தெரிவிக்கையில், குல்தீப் இதற்கு முன்பும் தீக்குளிக்க முயன்றுள்ளார். அதன் பின்னணி குறித்து தெரியவில்லை என்றனர். இந்நிலையில், அவருக்கு அவரது கழுத்து மற்றும் மார்பில் தீக்காயம் ஏற்பட்டுள்ளது என்றனர்.

இது தொடர்பாக  மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், செயலக பாதுகாப்பில் கடமையாற்றிய தலைமை காவலர் தற்போது பணி இடைநீக்கத்தில் உள்ளதாகத்  தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.