வழக்குரைஞா் அசோக் பாண்டே என்பவா் சாா்பில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘உயா்நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் தொடா்பான நிபந்தனைகளைக் குறிப்பிடும் அரசமைப்புச் சட்டப் பிரிவு 217-இல் குறிப்பிடப்பட்டுள்ள விளக்கத்தின்படி, ‘மாநில வழக்குரைஞா் சங்கத்தில் (பாா்) வழக்குரைஞராக பதிவு செய்து பின்னா், உச்சநீதிமன்றத்தில் வழக்குரைஞா் பணியைத் தொடா்ந்து வருவோா் உயா்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட தகுதியற்றவா்கள்’ என்று தெரிவிக்கிறது. எனவே, இத்தகைய வழக்குரைஞா்களை உயா்நீதிமன்ற நீதிபதி பணியிடங்களுக்கு கருத்தில் கொள்ளக்கூடாது என உத்தரவிட வேண்டும்’ என்று கோரியிருந்தாா்.