பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

ஹரியாணாவில் ராகுலின் நடைப்பயணம்!

ராகுல் காந்தியின் ஒற்றுமை நடைப்பயணம் இன்று உத்தர பிரதேசத்தில் இருந்து ஹரியாணாவில் மீண்டும் நுழைகிறது. 

News image
Updated On :6 ஜனவரி 2023, 3:15 am

DIN

ராகுல் காந்தியின் ஒற்றுமை நடைப்பயணம் இன்று உத்தர பிரதேசத்தில் இருந்து ஹரியாணாவில் மீண்டும் நுழைந்தது. 

தமிழகத்தில் தொடங்கிய காங்கிரஸின் ஒற்றுமை நடைப்பயணம் கேரளம், ஆந்திரம், தெலங்கானா, மகாராஷ்டிரம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களைத் தொடர்ந்து தலைநகர் தில்லிக்குள் நுழைந்தது.

சில நாள்கள் ஓய்வுக்குப் பிறகு ஜனவரி 3 ஆம் தேதி மீண்டும் ராகுலின் நடைப்பயணம் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் நேற்றுடன் உத்தர பிரதேசத்தில் பயணம் முடிந்த நிலையில் இன்று ஹரியாணாவின் உச்சகான் பகுதியில் தொடங்குகிறது. இன்று சனொலி பானிபட் சாலையில் இருந்து ஹூடா மைதானம் வரை நடைப்பயணம் நடைபெறுகிறது. 

ராஷ்ட்ரிய லோக் தளம் உள்ளிட்ட கட்சியினர் கலந்துகொண்டு ராகுல் காந்தியின் நடைப்பயணத்துக்கு ஆதரவு தெரிவிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

நடைபயணம் ஹிமாசல் வழியாக ஜம்மு-காஷ்மீரில் முடிவடைகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.