மகாராஷ்டிர அரசு மருத்துவமனை மருத்துவரை நோயாளி ஒருவர் கத்தியால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் யவத்மால், ஸ்ரீ வசந்தராவ் நாயக் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று இரவு 7.30 மணிக்கு மருத்துவர் ஒருவரை நோயாளி ஒருவர் கத்தியால் தாக்கியுள்ளார். காயமடைந்த மருத்துவர் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவத்தைக் கண்டித்து ஸ்ரீ வசந்தராவ் நாயக் அரசு மருத்துவமனையின் மருத்துவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கு முன்னதாகவும் இந்த மருத்துவமனையில் இதுபோன்றதொரு சம்பவம் நடைபெற்றதாகக் கூறி பாதுகாப்பு வேண்டும் என்று துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
ஏற்கெனவே இந்த மருத்துவமனையில் பாதுகாப்பை அதிகரிக்குமாறு மாநில அரசிடம் கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
இந்திய கிரிக்கெட் வீரா்களுக்கு புதுச்சேரி முதல்வா் ரங்கசாமி பாராட்டு

அபிஷேகப்பாக்கத்தில் சாலை மறியல்

செவிலியா் கல்லுாரி மாணவா்கள் போராட்டம்

மாவட்ட அளவிலான கலைப் போட்டிகள்
வீடியோக்கள்

சஞ்சு சாம்சன் ஜெயித்த கதை!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | டி20 உலகக் கோப்பை: இந்தியா மீண்டும் சாம்பியன்! | T20 World Cup
தினமணி வீடியோ செய்தி...

நிதீஷ் நிலைமை எடப்பாடிக்கும் ஏற்படுமா? | ADMK | Avadi Kumar interview | EPS | BJP
தினமணி வீடியோ செய்தி...

யூத் டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

