ராகுல் காந்தியின் ஒற்றுமை நடைப்பயணம் சனிக்கிழமை காலை ஹரியாணாவின் கர்னால் மாவட்டத்தில் இன்று காலை மீண்டும் தொடங்கியது.
கராவுண்டாவில் உள்ள கோஹண்ட் கிராமத்தில் தொடங்கிய நடைப்பயணத்தில் ஒலிம்பிக் பதக்கம் வென்ற குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் மற்றும் மூத்த காங்கிரஸ் தலைவர்களான பூபேந்தர் சிங் ஹூடா மற்றும் ரன்தீப் சுர்ஜேவாலா ஆகியோர் கலந்துகொண்டனர்.
நடைப்பயணத்தின் அட்டவணையின்படி, இன்றிரவு இந்திரியில் நிறுத்தப்பட்டு மறுநாள் காலை குருக்ஷேத்ராவில் இருந்து தொடங்குகிறது.
கடந்த வியாழக்கிழமை மாலை உத்தரப் பிரதேசத்தில் இருந்து ஹரியாணாவிற்குள் நுழைந்தது. அதைத்தொடர்ந்து, வெள்ளியன்று பானிபட்டில் நடைபெற்ற பேரணியில் உரையாற்றிய காந்தி, பொருளாதாரம் மற்றும் வேலையின்மை குறித்து பாஜக அரசை கடுமையாக சாடினார்.
தமிழகத்தில் தொடங்கிய காங்கிரஸின் ஒற்றுமை நடைப்பயணம் கேரளம், ஆந்திரம், தெலங்கானா, மகாராஷ்டிரம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தில்லி, உத்தரப் பிரதேசத்தைத் தொடர்ந்து ஹரியாணாவில் தற்போது நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மதுரை மாவட்டத்தில் 5 இடங்களில் வாக்கு எண்ணிக்கை மையங்கள்!
ஐ.நா. அவைத் தலைவர் அனலேனா இந்தியா வருகை!
ஓடிடியில் வெளியானது ஹேப்பி ராஜ்!
இந்தியா - நியூஸிலாந்து இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

