திரைத்துறையில் 51 ஆண்டுகளை நிறைவு செய்த ரஜினிகாந்த்!எடப்பாடி தொகுதி தவெக வேட்பாளர் அதிமுகவில் இணைந்தார்!திருவொற்றியூரில் பள்ளி மாணவா் கொலை: 12 பேர் கைதுதேவ்தத் படிக்கல் சதம், கே.எல்.ராகுல் அரைசதம்; முதல் நாளில் இந்திய அணி 288 ரன்கள் குவிப்பு!முதல்வர் விஜய் குறித்து அநாகரிகப் பேச்சு: நயினார் நாகேந்திரன் மீது டிஜிபியிடம் புகார்!பேரவையில் அப்பாவைத் தேடினால்...! முதல்வர் விஜய் குறித்து நயினார் அநாகரிகப் பேச்சு
/

தில்லியில் கடும் பனி: பயணிகளுக்கு விமான நிலையம் அறிவுறுத்தல்

கடும் பனி காரணமாக விமான பயணிகளுக்கு தில்லி விமான நிலையம் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. 

News image
Updated On :2 பிப்ரவரி 2024, 12:09 am IST

கடும் பனி காரணமாக விமான பயணிகளுக்கு தில்லி விமான நிலையம் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. 

தில்லி, உத்தர பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் கடும் பனி நிலவி வருகிறது. இதனால் மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். 

தில்லியில் கடும் பனியால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் வாகனங்கள் காலையிலேயே முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி செல்கின்றன.

கடும் பனியால் விமான சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து விமான பயணிகளுக்கு தில்லி விமான நிலையம் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. 

விமான இயக்கங்கள் தற்போது சீராக இருப்பதாகவும் எனினும் பயணிகள், தாங்கள் பயணிக்கவுள்ள விமானங்களின் சமீபத்திய தகவல், அடுத்த இயக்கம் உள்ளிட்ட விவரங்களை விமான நிறுவனத்தை தொடர்புகொண்டு கேட்டறிந்து கொள்ளவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடும் பனி, புகை காரணமாக சில விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.