வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

அரசு அளித்த உரையை முழுமையாக வாசித்த கேரள ஆளுநர்!

கேரள மாநில பட்ஜெட் கூட்டத்தொடரில் அரசு தயாரித்து கொடுத்த உரையை ஆளுநர் ஆரிப் முகமதுகான் முழுமையாக வாசித்தார். 

News image
Updated On :23 ஜனவரி 2023, 2:37 pm

DIN

கேரள மாநில பட்ஜெட் கூட்டத்தொடரில் அரசு தயாரித்து கொடுத்த உரையை ஆளுநர் ஆரிப் முகமதுகான் முழுமையாக வாசித்தார். 

கேரளத்தில் பினராயி விஜயன் தலைமையிலான அரசுக்கும் ஆளுநர் ஆரிப் முகமதுகானுக்கும் இடையே மோதல்போக்கு நீடித்துவரும் நிலையில், அரசு அளித்த உரையை முழுமையாக வாசித்து உரையாற்றினார். 

தமிழக சட்டப்பேரவையில், அரசு அளித்த உரையை ஆளுநர் ஆர்.என். ரவி வாசித்ததில், சில வரிகளையும், வார்த்தைகளையும் தவிர்த்து படித்தது விமர்சனத்திற்குள்ளானது. 

இந்நிலையில், கேரளத்தில் சட்டப்பேரவைக் கூட்டம் இன்று தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால், ஆளுநர் உரையுடன் தொடங்கப்பட்டது. இதில் கேரள அரசு தயாரித்துக் கொடுத்த உரையை ஆளுநர்  ஆரிப் முகமதுகான்  முழுமையாக வாசித்தார். 

மாநில அரசின் கடன் வரம்பை கட்டுப்படுத்தும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு ஆளுநர் உரையில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அதனையும் ஆளுநர் வாசித்தார். வலுவான நாட்டிற்கு மாநிலங்கள் அதிகாரம் பெற்றவையாக இருக்க வேண்டும் எனவும் உரையில் குறிப்பிடப்பட்டது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.