தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

பசுஞ்சாணத்தால் கட்டிய வீடுகள் கதிர்வீச்சினால் பாதிக்காது: குஜராத் நீதிமன்ற நீதிபதி

"மாட்டுச் சாணத்தால் ஆன வீடுகள் அணுக் கதிர்வீச்சால் பாதிக்கப்படாது என்பதை அறிவியல் நிரூபித்துள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.

News image

குஜராத் நீதிமன்றம் தீர்ப்பு

Updated On :24 ஜனவரி 2023, 9:07 am


வியாரா: குஜராத்தின் தபி மாவட்டத்தில் உள்ள செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி, நாட்டில் பசுக்களைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி, "மாட்டுச் சாணத்தால் ஆன வீடுகள் அணுக் கதிர்வீச்சால் பாதிக்கப்படாது என்பதை அறிவியல் நிரூபித்துள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பசுவின் சிறுநீர் பல தீராத நோய்களை குணப்படுத்தும் என்று தபி மாவட்ட அமர்வு நீதிபதி சமீர் வியாஸ் கடந்த ஆண்டு நவம்பரில் பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். சட்ட விதிளை மீறி குஜராத்தில் இருந்து மகாராஷ்டிராவிற்கு பசு மற்றும் காளைகளை கடத்திச் சென்ற 22 வயது இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த தண்டனை விவரம் அண்மையில் வெளியிடப்பட்டது.

நீதிபதி தனது உத்தரவில், மாடுகளை இறைச்சிக்காக கொல்வது குறித்து அதிருப்தி தெரிவித்ததோடு, பசு ஒரு விலங்கு மட்டுமல்ல "நமது தாய்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பசுவின் இரத்தத் துளிகள் பூமியில் விழாத நாளில்தான், பூமியின் அனைத்து பிரச்சனைகளும் தீர்க்கப்படும். பசு பாதுகாப்பு பற்றி பேசினாலும் அது முறைப்படி செயல்படுத்தப்படவில்லை. பசு வதை மற்றும் சட்டவிரோத பசு கடத்தல் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இது ஒரு நாகரீக சமுதாயத்திற்கு அவமானம்” என்றும் நீதிபதி அந்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.