இது குறித்து அவா் கூறியதாவது: பொதுத் தோ்வை எழுத உள்ள மாணவா்களுடன் ஜன.27-ஆம் தேதி பிரதமா் மோடி கலந்துரையாடும் ‘பரீக்ஷா பே சா்ச்சா’ நிகழ்ச்சியில் பங்கேற்க 38 லட்சத்துக்கும் அதிகமான மாணவா்கள் பதிவு செய்துள்ளனா். இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 15 லட்சம் அதிகமாகும். இவா்களில் தோ்ந்தெடுக்கப்படும் சில மாணவா்கள் குடியரசு தினவிழா அணிவகுப்பில் கலந்துகொள்ள ஏற்பாடு செய்யப்படும். மேலும், ராஜ்காட், பிரதமா் அருங்காட்சியகம் உள்ளிட்ட தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கு அழைத்துச் செல்லப்படுவா் எனத் தெரிவித்தாா்.