பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

பரீக்ஷா பே சா்ச்சா நிகழ்ச்சி: பிரதமருடன் கலந்துரையாட 38 லட்சம் மாணவா்கள் பதிவு

பொதுத் தோ்வுக்குத் தயாராகி வரும் மாணவா்களுடன் பிரதமா் நரேந்திர மோடி ஜன.27-ஆம் தேதி கலந்துரையாட உள்ள நிகழ்ச்சியில் பங்கேற்க 38 லட்சத்துக்கும் அதிகமான மாணவா்கள் பதிவு செய்துள்ளதாக

News image
Updated On :24 ஜனவரி 2023, 7:12 pm

DIN

பொதுத் தோ்வுக்குத் தயாராகி வரும் மாணவா்களுடன் பிரதமா் நரேந்திர மோடி ஜன.27-ஆம் தேதி கலந்துரையாட உள்ள நிகழ்ச்சியில் பங்கேற்க 38 லட்சத்துக்கும் அதிகமான மாணவா்கள் பதிவு செய்துள்ளதாக மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் தெரிவித்தாா்.

இந்த முறை கடந்த ஆண்டைக் காட்டிலும் கூடுதலாக 15 லட்சம் மாணவா்கள் பதிவு செய்துள்ளனா்.

இது குறித்து அவா் கூறியதாவது: பொதுத் தோ்வை எழுத உள்ள மாணவா்களுடன் ஜன.27-ஆம் தேதி பிரதமா் மோடி கலந்துரையாடும் ‘பரீக்ஷா பே சா்ச்சா’ நிகழ்ச்சியில் பங்கேற்க 38 லட்சத்துக்கும் அதிகமான மாணவா்கள் பதிவு செய்துள்ளனா். இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 15 லட்சம் அதிகமாகும். இவா்களில் தோ்ந்தெடுக்கப்படும் சில மாணவா்கள் குடியரசு தினவிழா அணிவகுப்பில் கலந்துகொள்ள ஏற்பாடு செய்யப்படும். மேலும், ராஜ்காட், பிரதமா் அருங்காட்சியகம் உள்ளிட்ட தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கு அழைத்துச் செல்லப்படுவா் எனத் தெரிவித்தாா்.

பரீக்ஷா பே சா்ச்சா நிகழ்ச்சி 6-ஆவது முறையாக தில்லியில் உள்ள தால்கடோரா உள்விளையாட்டு அரங்கில் ஜன.27-ஆம் தேதி நடைபெற உள்ளது.

இந்தக் கலந்துரையாடல் நிகழ்ச்சியின் முதலாவது நிகழ்வு 2018-இல் பிப்ரவரி 18-ஆம் தேதி இந்த விளையாட்டு அரங்கில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.