அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு! ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

ஆர்பிஐ உடனான ஆலோசனைக்குப் பிறகு பழக்கடையில் ஆனந்த் மஹிந்திரா செய்த செயல்!

ரிசர்வ் வங்கி உடனான ஆலோசனைக்குப் பிறகு இணைய வழி பணப்பரிவர்த்தனை குறித்து அறிந்துகொண்டதாக மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனர் ஆனந்த் மஹிந்திரா தெரிவித்துள்ளார்.

News image
ஆனந்த் மஹிந்திரா
Updated On :25 ஜனவரி 2023, 11:47 am

DIN

ரிசர்வ் வங்கி உடனான ஆலோசனைக்குப் பிறகு இணைய வழி பணப்பரிவர்த்தனை குறித்து அறிந்துகொண்டதாக மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனர் ஆனந்த் மஹிந்திரா தெரிவித்துள்ளார். 

ரிசர்வ் வங்கி உடனான ஆலோசனைக்குப் பிறகு சாலையோரமிருந்த பழக்கடைக்குச் சென்று இணையவழி பணப்பரிவர்த்தனை செய்து பழங்களை வாங்கினார். இது தொடர்பான விடியோவையும் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். 

இந்திய தொழில் முனைவோர்களின் ஒருவரான ஆனந்த மஹிந்திரா, சமூக வலைதளங்களில் சுவாரசியமான விடியோக்களை அடிக்கடி பகிர்வது வழக்கம். 

அந்தவகையில், தற்போது சாலையோர பழக்கடையில் இணையவழி பணப்பரிவர்த்தனை மூலம் பழங்கள் வாங்கியுள்ள விடியோவைப் பகிர்ந்துள்ளார். 

அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, ரிசர்வ் வங்கி உடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.  அதில் இணையவழி பணப் பரிவர்த்தனை குறித்து அறிந்துகொண்டேன். அந்த ஆலோசனைக்குப் பிறகு அருகில் சாலையோரம் பழக்கடை வைத்திருந்த பச்சே லால் சஹானியை சந்தித்தேன். அவரிடம் முதல் முறையாக இணைய பணப் பரிவர்த்தனை செய்து பழங்களை வாங்கினேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.